திருநெல்வேலியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாட்கள் கட்சிக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை இரவு ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த மு.க ஸ்டாலின், புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையில் பொதுமக்களுடன் அல்வா ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தார். அதன்படி, சுவையான திருநெல்வேலி அல்வாவை வீட்டில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு: 2 கப்
- சர்க்கரை - 4 1/2 கப்
- நெய் - 200 மி.லி
- வறுத்த முந்திரி - 15
திருநெல்வேலி அல்வா செய்முறை:
ஸ்டெப் 1:
- ஒரு அகல பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசையவும்.
- சாஃப்டாக பிசைந்ததும், அதே பாத்திரத்தில் சுமார் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் அல்லது 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பின்னர், மாவை அதே நீரில் நன்கு அழுத்தி கரைக்கவும். மாவு முழுவதும் கரைந்ததும், வடிக்கட்டி அந்த பாலை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
- அல்வா செய்வதற்கு இந்த பாலை நன்கு புளிக்க வைக்க வேண்டும். அதற்கு, நாம் வடிகட்டி வைத்துள்ள பாலை பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் மூடி வைத்து விடுங்கள்.
ஸ்டெப் 2:
- காலையில் பாத்திரத்தை திறந்து பார்க்கும் போது, பால் நன்கு புளித்திருக்கும். இப்போது, புளித்த பாலின் மேல் படிந்திருந்த ஏடை கரண்டியால் நீக்கிவிட்டு பாலை வடிகட்டினால், அல்வா செய்வதற்கான திக்கான பால் தயார்.
- இப்போது, அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து சூடாக்கி, வடித்து வைத்திருக்கும் பாலை ஊற்றவும். 15 நிமிடத்திற்கு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, கை விடாமல் கிண்டவும்.
- பின்னர், 3 கப் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை நன்கு கிளறவும். இரண்டும் நன்கு கலந்து அல்வா பதத்திற்கு வந்ததும் கடாயை இறக்கி வைக்கவும்.
ஸ்டெப் 3:
- இப்போது, அல்வா செய்வதற்கான சர்க்கரை பாகு தயார் செய்ய வேண்டும். இது தான் அல்வாவிற்கான நிறத்தை கொடுக்கிறது. அதற்கு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 6 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும்.
- சூட்டிற்கு சர்க்கரை கரைந்து பாகு போல உருகி வரும். தண்ணீர் சேர்க்காமல் தயாரிக்கப்படும் இந்த சர்க்கரை பாகு நிறம் மாறி, இருகாமல் இருக்கும் போது பாத்திரத்தை இறக்கி விடவும்.
ஸ்டெப் 4:
- இறுதியாக, மாவு இருக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை பாகு சேர்த்து கிளறவும். வெள்ளை நிறத்தில் இருக்கும் மாவு நிறம் மாறி ஒரிஜனல் அல்வா நிறத்திற்கு வரும். அடுத்ததாக கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கரண்டியால் அல்வாவை கிளறி, வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து இறக்கினால், திருநெல்வேலி அல்வா தயார். கையில் அல்வா ஒட்டாமல் வந்தால் சரியான பதம். அவ்வளவு தான்..திருநெல்வேலி அல்வா ரெடி.
இதையும் படிங்க:
கேரளா ஸ்பெஷல் கலத்தப்பம்...ஈவினிங் டீ-க்கு பெஸ்ட் காம்பினேஷன்!