ETV Bharat / state

ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கேட்ட கர்நாடக காவல் துறை - வாகன ஓட்டுநர்கள் வாக்குவாதம்

author img

By

Published : Aug 8, 2021, 11:45 AM IST

தமிழ்நாடு, கேரளாவிலிருந்து கர்நாடகா சென்ற சரக்கு வாகனங்களை மறித்த கர்நாடக காவல் துறையினர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் வாகன ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாகன ஓட்டுநர்கள் வாக்குவாதம்
வாகன ஓட்டுநர்கள் வாக்குவாதம்

நீலகிரி: தமிழ்நாடு - கர்நாடகா எல்லையிலுள்ள கக்கநல்லா சோதனைச்சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்துசெல்கின்றன.

தற்போது கரோணா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் வாகனங்களில் வரும் பயணிகளுக்கு இ-பாஸ், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமாக சென்றுவரும் சரக்கு வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

கர்நாடக அலுவலர்களுடன் வாக்குவாதம்

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 07) தமிழ்நாடு பகுதிகளில் மட்டுமின்றி கேரளாவில் இருந்து சென்ற சரக்கு வாகனங்களை கர்நாடக எல்லையில் இருந்த கர்நாடக காவல் துறை, வனத்துறை, வருவாய் துறை அலுவலர்கள் உள்ளே விட மறுத்தனர்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் உள்ளவர்களை மட்டுமே விட முடியும் என கூறியதால் லாரி ஓட்டுநர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிகமாக வாகனங்கள் செல்ல அனுமதி

தினசரி சென்று சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தினசரி எவ்வாறு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய முடியும் என லாரி ஓட்டுநர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால், லாரி ஓட்டுநர்கள் ஒருமுறை எடுக்கும் ஆர்டிபிசிஆர் சான்றிதழ் ஒரு வாரத்திற்கு செல்லுபடியாகும் என கர்நாடக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த வாக்குவாதத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.

இதையும் படிங்க: கும்பமேளாவில் கரோனா சோதனை செய்த ஆய்வகங்களில் திடீர் ரெய்டு: வெளியான திடுக்கிடும் தகவல்

நீலகிரி: தமிழ்நாடு - கர்நாடகா எல்லையிலுள்ள கக்கநல்லா சோதனைச்சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்துசெல்கின்றன.

தற்போது கரோணா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் வாகனங்களில் வரும் பயணிகளுக்கு இ-பாஸ், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமாக சென்றுவரும் சரக்கு வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

கர்நாடக அலுவலர்களுடன் வாக்குவாதம்

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 07) தமிழ்நாடு பகுதிகளில் மட்டுமின்றி கேரளாவில் இருந்து சென்ற சரக்கு வாகனங்களை கர்நாடக எல்லையில் இருந்த கர்நாடக காவல் துறை, வனத்துறை, வருவாய் துறை அலுவலர்கள் உள்ளே விட மறுத்தனர்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் உள்ளவர்களை மட்டுமே விட முடியும் என கூறியதால் லாரி ஓட்டுநர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிகமாக வாகனங்கள் செல்ல அனுமதி

தினசரி சென்று சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தினசரி எவ்வாறு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய முடியும் என லாரி ஓட்டுநர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால், லாரி ஓட்டுநர்கள் ஒருமுறை எடுக்கும் ஆர்டிபிசிஆர் சான்றிதழ் ஒரு வாரத்திற்கு செல்லுபடியாகும் என கர்நாடக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த வாக்குவாதத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.

இதையும் படிங்க: கும்பமேளாவில் கரோனா சோதனை செய்த ஆய்வகங்களில் திடீர் ரெய்டு: வெளியான திடுக்கிடும் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.