ETV Bharat / state

லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 1, 2020, 7:42 PM IST

தஞ்சாவூர்: திருவோணம் அருகே அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பட்டுவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வம். இவரது மகன் விஜயன் (27). இவர், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் ஊரணிபுறத்தில் இருந்து திருவோணம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது பத்துபள்ளிவிடுதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாய் வந்த லாரி விஜயன் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட விஜயன், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விஜயனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்தது, கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கட்சிபட்டியைச் சேர்ந்த மணிசேகரன் (47) என்பது தெரியவந்தது. பின்னர், அவரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பட்டுவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வம். இவரது மகன் விஜயன் (27). இவர், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் ஊரணிபுறத்தில் இருந்து திருவோணம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது பத்துபள்ளிவிடுதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாய் வந்த லாரி விஜயன் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட விஜயன், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விஜயனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்தது, கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கட்சிபட்டியைச் சேர்ந்த மணிசேகரன் (47) என்பது தெரியவந்தது. பின்னர், அவரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.