தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி இன்று (செப். 18) ஒரேநாளில் மாவட்டத்தில் 162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,063 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7,892 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 1,031 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அதேபோல் 140 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.