ETV Bharat / state

"ஊழலுக்காக உருவானது இந்தியா கூட்டணி" - பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 5:11 PM IST

India Alliance vs NDA: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விரைவில் விசாரணைக்கு வந்து திமுக கட்சி சிறைக்குச் செல்லும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.

bjp karuppu muruganandham press meet
பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்கள் சந்திப்பு

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் இன்று (டிச.13) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “நிலக்கரி ஒப்பந்தம் ஊழல், தொலைதொடர்பு துறை ஊழல் என ஊழல் மட்டுமே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி எம்பி தீரஜ் சாகு என்பவர் வீட்டில் ரூ.350 கோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை, இந்த நாட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, வருமானவரித்துறை சோதனை ஆகியவற்றில் இவ்வளவு பெரியத் தொகை அளவிற்கு பணத்தை பதுக்கி வைத்து கைப்பற்றப்படவில்லை.

ஊழலுக்காக உருவானது இந்தியா கூட்டணி?: எம்பி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எம்பி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை; கட்சியிலிருந்து நீக்கவில்லை. அவர்களுடைய கூட்டணியே ஊழல் செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக கட்சி 2G ஸ்பெக்ட்ரம் தொலைதொடர்பு துறையில் ஊழல் செய்தது. அந்த விவகாரம் விசாரணைக்கு வர உள்ளது. விரைவில் தீர்ப்பு வந்து சிறைக்கு செல்வார்கள். தற்போது ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி, பொன்முடி, எ.வ.வேலு, துரைமுருகன் மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோர் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது ஒன்றுதான் குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கக்கூடிய அத்தனை பேருமே, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள். இந்திய நாட்டு மக்களின் பெரும்பான்மை கனவாக இருந்த அயோத்தியில் ராமர் கோயில் (Ramar Temple) கட்ட வேண்டும் என்ற பணி தற்போது நடைபெற்று முடிந்து, 2024 ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் நடைபெற உள்ளன. இந்திய பிரதமர் மோடி ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட எல்லா திட்டங்களையும், ஒவ்வொன்றாக பிரதமர் நிறைவேற்றி வருகிறார்.

மோடி உத்தரவாதம்: பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்னவென்றால் "மோடி கி கேரண்டி" என்ற பெயரில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் யாரையும் நான் விடமாட்டேன். மக்கள் பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுப்பதுதான் பிரதமர் மோடியின் உத்தரவாதம்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சிக்கலை உருவாக்கும் - இம்ரான் கான்

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் இன்று (டிச.13) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “நிலக்கரி ஒப்பந்தம் ஊழல், தொலைதொடர்பு துறை ஊழல் என ஊழல் மட்டுமே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி எம்பி தீரஜ் சாகு என்பவர் வீட்டில் ரூ.350 கோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை, இந்த நாட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, வருமானவரித்துறை சோதனை ஆகியவற்றில் இவ்வளவு பெரியத் தொகை அளவிற்கு பணத்தை பதுக்கி வைத்து கைப்பற்றப்படவில்லை.

ஊழலுக்காக உருவானது இந்தியா கூட்டணி?: எம்பி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எம்பி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை; கட்சியிலிருந்து நீக்கவில்லை. அவர்களுடைய கூட்டணியே ஊழல் செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக கட்சி 2G ஸ்பெக்ட்ரம் தொலைதொடர்பு துறையில் ஊழல் செய்தது. அந்த விவகாரம் விசாரணைக்கு வர உள்ளது. விரைவில் தீர்ப்பு வந்து சிறைக்கு செல்வார்கள். தற்போது ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி, பொன்முடி, எ.வ.வேலு, துரைமுருகன் மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோர் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது ஒன்றுதான் குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கக்கூடிய அத்தனை பேருமே, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள். இந்திய நாட்டு மக்களின் பெரும்பான்மை கனவாக இருந்த அயோத்தியில் ராமர் கோயில் (Ramar Temple) கட்ட வேண்டும் என்ற பணி தற்போது நடைபெற்று முடிந்து, 2024 ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் நடைபெற உள்ளன. இந்திய பிரதமர் மோடி ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட எல்லா திட்டங்களையும், ஒவ்வொன்றாக பிரதமர் நிறைவேற்றி வருகிறார்.

மோடி உத்தரவாதம்: பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்னவென்றால் "மோடி கி கேரண்டி" என்ற பெயரில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் யாரையும் நான் விடமாட்டேன். மக்கள் பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுப்பதுதான் பிரதமர் மோடியின் உத்தரவாதம்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சிக்கலை உருவாக்கும் - இம்ரான் கான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.