ETV Bharat / state

தஞ்சை மருத்துவமனையில் மர்ம பொருளால் பதற்றம்! - தஞ்சை மருத்துவமனை

தஞ்சாவூர்: மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெடிகுண்டு போன்று இருந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மருத்துவமனை
author img

By

Published : Mar 25, 2019, 10:03 PM IST

தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது நுழைவாயில் மல்டி ஸ்பெஷாலிட்டி வளாகத்துக்கு அருகே 5 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட மர்ம பொருள் ஒன்று இருந்துள்ளது.

நூல்களால் சுற்றப்பட்டு வெடிகுண்டு போன்றிருந்த மர்ம பொருளை கண்டு சந்தேகமடைந்த நோயாளி ஒருவர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அப்போது அதில் வெடி மருந்து ஏதும் இல்லாதது தெரியவந்தது. அதையடுத்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து அதிகாரிகள், சமூக விரோதிகள் சிலர் பொது மக்களை அச்சப்படுத்தும் வகையில் இது போன்று செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.

தஞ்சை மருத்துவமனை

தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது நுழைவாயில் மல்டி ஸ்பெஷாலிட்டி வளாகத்துக்கு அருகே 5 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட மர்ம பொருள் ஒன்று இருந்துள்ளது.

நூல்களால் சுற்றப்பட்டு வெடிகுண்டு போன்றிருந்த மர்ம பொருளை கண்டு சந்தேகமடைந்த நோயாளி ஒருவர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அப்போது அதில் வெடி மருந்து ஏதும் இல்லாதது தெரியவந்தது. அதையடுத்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து அதிகாரிகள், சமூக விரோதிகள் சிலர் பொது மக்களை அச்சப்படுத்தும் வகையில் இது போன்று செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.

தஞ்சை மருத்துவமனை
தஞ்சாவூர் மார்ச் 25

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெடிகுண்டு போன்று இருந்த மர்ம பொருளால் பரபரப்பு



தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது நுழைவாயில் அருகே மல்டி ஸ்பெஷாலிட்டி வளாகம் அருகே  5 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் ஒன்று நூல்களால் சுற்றப்பட்டு   சுவற்றுக்கு அருகில் போடப்பட்டுள்ளது , இதனை கண்ட நோயாளி ஒருவர் பார்த்து தகவல் தெரிவித்ததை அடுத்து காவல் துறையினர்  வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்தனர், அக்கம்பக்கத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் இறுதியில்  அதை சோதனை செய்த போது அதில் வெடி மருந்து ஏதும் இல்லாதது தெரிந்ததை அடுத்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர், மேலும் இது சமூக விரோதிகள் சிலர் பொது மக்களை அச்சப்படுத்தும் வகையில் இது போன்று செய்திருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.