ETV Bharat / state

கோலாகலமாக தொடங்கிய நவராத்திரி கொண்டாட்டம்! - தஞ்சாவூரில் கொழு பொம்மைகள் கொண்டாட்டம்

தஞ்சாவூர்: ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெறும் கொலு கண்காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நவராத்திரி விழா
author img

By

Published : Sep 29, 2019, 8:40 AM IST

கும்பகோணத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர், ஸ்ரீ அபிமுகேஷ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு கண்காட்சி தொடங்கியது. இதில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொலு பொம்மைகள் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோயில்களை அலங்கரிக்கும் கொலு பொம்மைகள்!

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் அரசவை தர்பார், அஷ்ட லட்சுமிகளின் தத்ரூப பொம்மைகள், உள்ளிட்ட பல பொம்மைகள் ஆலயத்திற்கு வரும் பக்தர்களை வியக்க வைத்தது. மேலும் கோயில் முழுவதும் தோரணங்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

கும்பகோணத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர், ஸ்ரீ அபிமுகேஷ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு கண்காட்சி தொடங்கியது. இதில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொலு பொம்மைகள் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோயில்களை அலங்கரிக்கும் கொலு பொம்மைகள்!

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் அரசவை தர்பார், அஷ்ட லட்சுமிகளின் தத்ரூப பொம்மைகள், உள்ளிட்ட பல பொம்மைகள் ஆலயத்திற்கு வரும் பக்தர்களை வியக்க வைத்தது. மேலும் கோயில் முழுவதும் தோரணங்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்க:

மலைமகள் அலைமகள் கலைமகளை போற்றும் 'நவராத்திரி'

​​​​​​​

Intro:தஞ்சாவூர் செப் 28

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் ஆலயம்யதில் நவராத்திரியையொட்டி கொலு கண்காட்சி தொடங்கியது.
இதில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொலு பொம்மைகள் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Body:தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்ரீ அபிமுகேஷ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் நவராத்திரியையொட்டி கொலு கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொலு பொம்மைகள் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கும்பகோணத்தில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் 9 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி விழா குறிப்பிடத்தக்கது. இவ்விழாவின் போது மக்கள் தங்கள் வீடுகளில் விதவிதமான பொம்மைகளை 9 படிகளில் அடுக்கி, கல்வி, செல்வம், வீரத்திற்கான அதி தேவதைகளை வணங்கி இல்லங்களுக்கு வரவேற்பது வழக்கமான ஐதீகம்.

இந்நிலையில் நவராத்திரி விழா சிவாலயங்களில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவையொட்டி கொலு கண்காட்சி இன்று தொடங்கியது.

சுமார் 400 ஆண்டுகள் பழமையான புதுப்பிக்கப்பட்ட கொலு பொம்மைகள், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் அரசவை தர்பார், அஷ்ட லட்சுமிகளின் தத்ரூப பொம்மைகளின் கொலு கண்காட்சி ஆலயத்திற்கு வரும் பக்தர்களை வியக்க வைத்தது.

இதே போன்று ஸ்ரீ அபிமுகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் கொலு கண்காட்சி இன்று தொடங்கியது.

நாளை வைணவ ஆலயங்களில் நவராத்திரி விழா தொடங்க உள்ளது.Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.