ETV Bharat / state

தொடர் வழிப்பறி சம்பவம்: 4 பேரை 12 மணி நேரத்தில் கைது செய்து காவல் துறை அதிரடி!

author img

By

Published : Jan 22, 2020, 2:32 PM IST

தஞ்சை: முகமூடி அணிந்து அரிவாளைக் காட்டி மிரட்டி தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை காவல் துறையினர் 12 மணி நேரத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வழிப்பறி கொள்ளையர்கள் கைது
வழிப்பறி கொள்ளையர்கள் கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வளையப்பேட்டை, அசூர் புறவழிச்சாலை, திருவலஞ்சுழி உள்ளிட்ட பகுதி சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை வழி மறித்து பணம், செல்போன் மற்றும் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து வழிப்பறி மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கும்பகோணம் நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் வழிப்பறி கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி அதிகாலை வளையப்பேட்டை ரவுண்டானா அருகே இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக தாராசுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், முகேஷ், அடால்ஃப் ஹிட்லர் மற்றும் அம்மாபேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்தி, செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திருப்பூர், கோவையில் வேலை செய்து வரும் நால்வரும் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்த போது வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழிப்பறி சம்பவங்களில் இரண்டு நபர்கள் உள்ளதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அந்த இரண்டு நபர்களையும் தனிப்படை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

வழிப்பறி கொள்ளையர்கள் கைது

இந்த வழிப்பறி சம்பவம் நிகழ்ந்து 12 மணி நேரத்தில் தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பெற்ற குழந்தைக்கு மது கொடுத்து சித்ரவதை செய்த தாய்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வளையப்பேட்டை, அசூர் புறவழிச்சாலை, திருவலஞ்சுழி உள்ளிட்ட பகுதி சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை வழி மறித்து பணம், செல்போன் மற்றும் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து வழிப்பறி மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கும்பகோணம் நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் வழிப்பறி கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி அதிகாலை வளையப்பேட்டை ரவுண்டானா அருகே இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக தாராசுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், முகேஷ், அடால்ஃப் ஹிட்லர் மற்றும் அம்மாபேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்தி, செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திருப்பூர், கோவையில் வேலை செய்து வரும் நால்வரும் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்த போது வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழிப்பறி சம்பவங்களில் இரண்டு நபர்கள் உள்ளதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அந்த இரண்டு நபர்களையும் தனிப்படை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

வழிப்பறி கொள்ளையர்கள் கைது

இந்த வழிப்பறி சம்பவம் நிகழ்ந்து 12 மணி நேரத்தில் தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பெற்ற குழந்தைக்கு மது கொடுத்து சித்ரவதை செய்த தாய்!

Intro:தஞ்சாவூர் ஜன 22

முகமூடி அணிந்து அரிவாளைக் காட்டி மிரட்டி தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் 12 மணி நேரத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்Body:.
தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தில் வளையப்பேட்டை, ஆசூர் புறவழிச்சாலை, திருவலஞ்சுழி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை வழி மறித்து பணம், செல்போன், மற்றும் நகைகளை மர்ம நபர்கள் வழிப்பறி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி அதிகாலை வளையப்பேட்டை ரவுண்டானா அருகே இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக தாராசுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், முகேஷ், அடால்ஃப் ஹிட்லர் மற்றும் குடியானத் தெரு அம்மாபேட்டையைச் சேர்ந்த ஜெதீஷ், ஆகியோரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்தி, செல்போன், மற்றும் ரொக்கம் ஆகியேற்வற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர், கோவையில் வேலை செய்து வரும் இவர்கள் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்த போது வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

வழிப்பறி சம்பவம் நிகழ்ந்து 12 மணி நேரத்தில் தேனிப்படை போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இவர்களது கூட்டாளிகள் மேலும் இருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Conclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.