ETV Bharat / state

'ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' - சிபிஎம் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

தஞ்சாவூர்: ஆடிட்டர் குருமூர்த்தி பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய கருத்திற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

maxist communist seceratery
author img

By

Published : Aug 25, 2019, 11:30 PM IST

சென்னை மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி இந்திய பெண்களில் 30 விழுக்காடு பெண்கள்தான் பெண்மையுடன் இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது சர்ச்சையான இந்தக் கருத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆடிட்டர் குருமூர்த்தி பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்ச் சமூகத்தை சீர்குலைக்கும் விதமாக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே, ஆடிட்டர் குருமூர்த்தி பெண்கள் குறித்து பேசிய கருத்தைத் திரும்ப பெறுவது மட்டுமின்றி, பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்கிறார். பொதுவாக ஒரு மாநில முதலமைச்சர் வெளிநாட்டுக்குச் செல்கிறபோது அவரது பணிகளை முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைத்து செல்வது வழக்கம். ஆனால் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் அவர், தனது பணிகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லையா? என சந்தேகம் தோன்றுகிறது.

பாலகிருஷ்ணனின் கண்டன கருத்து

ஒருவேளை, வெளிநாட்டுக்குச் சென்று விட்டு திரும்பும் போது, பதவி பறிபோகுமா? என்று பயப்படுகிறாரா? என்று தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

சென்னை மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி இந்திய பெண்களில் 30 விழுக்காடு பெண்கள்தான் பெண்மையுடன் இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது சர்ச்சையான இந்தக் கருத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆடிட்டர் குருமூர்த்தி பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்ச் சமூகத்தை சீர்குலைக்கும் விதமாக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே, ஆடிட்டர் குருமூர்த்தி பெண்கள் குறித்து பேசிய கருத்தைத் திரும்ப பெறுவது மட்டுமின்றி, பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்கிறார். பொதுவாக ஒரு மாநில முதலமைச்சர் வெளிநாட்டுக்குச் செல்கிறபோது அவரது பணிகளை முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைத்து செல்வது வழக்கம். ஆனால் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் அவர், தனது பணிகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லையா? என சந்தேகம் தோன்றுகிறது.

பாலகிருஷ்ணனின் கண்டன கருத்து

ஒருவேளை, வெளிநாட்டுக்குச் சென்று விட்டு திரும்பும் போது, பதவி பறிபோகுமா? என்று பயப்படுகிறாரா? என்று தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

Intro:தஞ்சாவூர் ஆக 25

இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்ததாக தெரிவிக்கும் மத்திய அரசு எதிர்கட்சி தலைவர்களை அனுமதிக்காதது ஏன் -
கே.பாலகிருஷ்ணன் கேள்விBody:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

ஆடிட்டர் குருமூர்த்தி 30 சதவீத பெண்கள் தான் பெண்மையுடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இது பெண்களுக்கு எதிரான செயல் ஆகும். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதேபோல் பா.ஜனதாவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும் ஊடகங்களில் பணியாற்றும் பெண்களை பற்றி தவறாக பேசியுள்ளார். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பெண்களுக்கு எதிராகவே தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
எடப்பாடி தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2 நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்கிறார். பொதுவாக ஒரு மாநில முதல்அமைச்சர் வெளிநாட்டுக்கு செல்லும் போது அவரது பணிகளை முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைத்து செல்வது வழக்கம். ஆனால் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் அவர், தனது பணிகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லையா? என சந்தேகம் தோன்றுகிறது. ஒருவேளை, வெளிநாட்டுக்கு சென்று விட்டு திரும்பும் போது, பதவி பறிபோகுமா? என்று பயப்படுகிறாரா? என்று தெரியவில்லை.
கடைமடை வரை
தற்போது டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. காவிரி தண்ணீர் வரும் வேளையில் அவசர அவசரமாக தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதை முன்னரே செய்திருக்க வேண்டும். காவிரி கடைமடை வரை தண்ணீர் செல்ல அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
நிர்மலா சீத்தாராமன்
மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன், தொழில்துறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் சிறு, குறு வியாபாரிகளுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. அவரது சலுகைகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் பயன் அடைவார்கள்.
நாட்டின் பாதுகாப்பு தடங்கள் உற்பத்தி செய்யும் பணியையும் தனியாருக்கு கொடுத்துள்ளது வேட்ககேடானது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பே கேள்விகுறியாகும்.
காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து விட்டதாக மத்திய அரசு கூறி வருகிறது. காஷ்மீர் எப்போது பிரிந்து இருந்தது. அது இந்தியாவின் ஒரு பகுதி தான். காஷ்மீருக்கு செல்ல விடாமல் எதிர் கட்சி தலைவர்களை தடுப்பது ஏன் என்று புரியவில்லை. அங்கு இயல்பு நிலை திரும்பி விட்டது என்று கூறுவது பொய்யா? காஷ்மீர் சம்மந்தமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4000 க்கும் மேற்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.