ETV Bharat / state

மீன்பிடி தடைகாலம்: மீன்களின் விலை உயர்வு!

author img

By

Published : May 3, 2019, 6:54 PM IST

தஞ்சாவூர்: மீன்பிடி தடைக்காலத்தை தொடர்ந்து மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், மீன் வாங்குவதற்கு ஆளில்லாமல் மார்கெட்டுகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தஞ்சாவூர்

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது. இதை அடுத்து விசைப்படகுகள் வரும் ஜூன் 14ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல கூடாது என்பதால் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீன் பிடிக்க தடை இல்லை என்பதால் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன் பிடிக்கும் மீனவர்கள் மட்டுமே தற்போது கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பெரும்பாலும் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் கரையோரப் பகுதியில் அதாவது கடற்கரையிலிருந்து நான்கு பாக தொலைவில் மட்டும்தான் கடலில் மீன்பிடிக்க முடியும். விசைப்படகுகள் போன்று ஆழ்கடல் பகுதியில் சென்று மீன் பிடிக்க முடியாது எனவே கரையோரங்களில் அகப்படும் மிகக் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் பிடிக்க முடியும்.

இதனடிப்படையில் தற்போது கடலில் மீன்வரத்து குறைந்துள்ளதால் உள்ளூர் மார்க்கெட்டுக்கு வரும் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை எப்போதும் போல் இல்லாமல் பல மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக கிலோ 500 ரூபாய்க்கு விற்ற காளை மீன் தற்போது 800 ரூபாயில் இருந்து 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுதவிர கிலோ 250 ரூபாய்க்கு விற்ற நெடுங்கால் நண்டு தற்போது 500 வரை விற்கப்படுகிறது.

மீன்களின் விலை உயர்வு

இதுபோன்று ஒவ்வொரு வகை மீன்களின் விலையும் அதிக அளவில் உயர்ந்துள்ளதால் மீன் பிரியர்கள் மீன்கள் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் மீன்பிடித் தடை காலம் எப்பொழுது முடியும் என்ற ஏக்கத்தில் அவர்கள் உள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு அதன் சுற்று வட்டாரப் பகுதி, பட்டுக்கோட்டை உட்பட அனைத்து பகுதியில் இருந்தும் மீன் வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது மீன்களின் அதீத விலையால் அது வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது. இதை அடுத்து விசைப்படகுகள் வரும் ஜூன் 14ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல கூடாது என்பதால் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீன் பிடிக்க தடை இல்லை என்பதால் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன் பிடிக்கும் மீனவர்கள் மட்டுமே தற்போது கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பெரும்பாலும் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் கரையோரப் பகுதியில் அதாவது கடற்கரையிலிருந்து நான்கு பாக தொலைவில் மட்டும்தான் கடலில் மீன்பிடிக்க முடியும். விசைப்படகுகள் போன்று ஆழ்கடல் பகுதியில் சென்று மீன் பிடிக்க முடியாது எனவே கரையோரங்களில் அகப்படும் மிகக் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் பிடிக்க முடியும்.

இதனடிப்படையில் தற்போது கடலில் மீன்வரத்து குறைந்துள்ளதால் உள்ளூர் மார்க்கெட்டுக்கு வரும் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை எப்போதும் போல் இல்லாமல் பல மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக கிலோ 500 ரூபாய்க்கு விற்ற காளை மீன் தற்போது 800 ரூபாயில் இருந்து 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுதவிர கிலோ 250 ரூபாய்க்கு விற்ற நெடுங்கால் நண்டு தற்போது 500 வரை விற்கப்படுகிறது.

மீன்களின் விலை உயர்வு

இதுபோன்று ஒவ்வொரு வகை மீன்களின் விலையும் அதிக அளவில் உயர்ந்துள்ளதால் மீன் பிரியர்கள் மீன்கள் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் மீன்பிடித் தடை காலம் எப்பொழுது முடியும் என்ற ஏக்கத்தில் அவர்கள் உள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு அதன் சுற்று வட்டாரப் பகுதி, பட்டுக்கோட்டை உட்பட அனைத்து பகுதியில் இருந்தும் மீன் வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது மீன்களின் அதீத விலையால் அது வெறிச்சோடி காணப்படுகிறது.

Intro:மீன் பிடி தடை காலம் எதிரொலி மீன் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை பல மடங்கு உயர்வு


Body:கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது இதை அடுத்து விசைப்படகுகள் வரும் ஜூன் 14ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல கூடாது என்பதால் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மீன் பிடிக்க தடை இல்லை என்பதால் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன் பிடிக்கும் மீனவர்கள் மட்டுமே தற்போது கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலும் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் கரையோரப் பகுதியில் அதாவது கடற்கரையிலிருந்து நான்கு பாக தொலைவில் மட்டும் தான் கடலில் மீன்பிடிக்க முடியும் விசைப்படகுகள் போன்று ஆழ்கடல் பகுதியில் சென்று மீன் பிடிக்க முடியாது எனவே கரையோரங்களில் அகப்படும் மிகக் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் பிடிக்க முடியும். இதனடிப்படையில் தற்போது கடலில் மீன் வரத்து குறைந்துள்ளதால் உள்ளூர் மார்க்கெட்டுக்கு வரும் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை எப்போதும் போல இல்லாமல் பல மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக கிலோ 500 ரூபாய்க்கு விற்ற காளை மீன் தற்போது 800 ரூபாயில் இருந்து 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுதவிர கிலோ 250 ரூபாய்க்கு விற்ற நெடுங்கால் நண்டு தற்போது 500 வரை விற்கப்படுகிறது. இதுபோன்று ஒவ்வொரு வகை மீன்களின் விலையும் அதிக அளவில் உயர்ந்துள்ளதால் மீன் பிரியர்கள் மீன்கள் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் மீன்பிடி தடை காலம் எப்பொழுது முடியும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். மேலும் அதிராம்பட்டினத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல் அதன் சுற்று வட்டார பகுதி பட்டுக்கோட்டை உட்பட அனைத்து பகுதியில் இருந்தும் அதிகப்படியான மக்கள் எந்தநேரமும் இந்த மார்க்கெட்டுக்கு வந்து மீன் வாங்கி செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் தற்போது வெறிச்சோடி கிடக்கிறது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.