ETV Bharat / state

புழல் சிறையில் 30 கைதிகளுக்கு கரோனா தொற்று!

author img

By

Published : May 29, 2020, 11:47 PM IST

திருவள்ளூர்: புழல் சிறையில் 94 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தண்டனை சிறையில் உள்ள 30 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

criminals tested positive for corona
criminals tested positive for corona

திருவள்ளூர் மாவட்டம், சென்னை மத்திய புழல் சிறையில் பாளையங்கோட்டை, கடலூர், திருச்சி உள்ளிட்ட சிறைகளில் இருந்து கைவினைப்பொருட்கள் பயிற்சி பெறுவதற்காக வந்து சென்ற கைதிகளில், 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து புழல் சிறையில் உள்ள 19 சிறைக்காவலர்கள், 74 தண்டனைக் கைதிகள், அலுவலர் உட்பட மொத்தம் 94 பேருக்கு மாதவரம் மண்டல சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனையை நேற்று மேற்கொண்டனர். இதில் இன்று தண்டனை சிறையில் உள்ள 30 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 7 பேர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் 23 பேர் புழல் சிறையிலும் உள்ள அறைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து புழல் சிறையில் கைதிகள் தங்கி இருந்த அறைகளில் சுகாதாரத்துறையினர், கிருமிநாசினியைத் தெளிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: உலகளவில் 15ஆயிரம் ஊழியர்களை கைவிடுகிறது ரெனால்ட் நிறுவனம்!

திருவள்ளூர் மாவட்டம், சென்னை மத்திய புழல் சிறையில் பாளையங்கோட்டை, கடலூர், திருச்சி உள்ளிட்ட சிறைகளில் இருந்து கைவினைப்பொருட்கள் பயிற்சி பெறுவதற்காக வந்து சென்ற கைதிகளில், 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து புழல் சிறையில் உள்ள 19 சிறைக்காவலர்கள், 74 தண்டனைக் கைதிகள், அலுவலர் உட்பட மொத்தம் 94 பேருக்கு மாதவரம் மண்டல சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனையை நேற்று மேற்கொண்டனர். இதில் இன்று தண்டனை சிறையில் உள்ள 30 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 7 பேர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் 23 பேர் புழல் சிறையிலும் உள்ள அறைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து புழல் சிறையில் கைதிகள் தங்கி இருந்த அறைகளில் சுகாதாரத்துறையினர், கிருமிநாசினியைத் தெளிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: உலகளவில் 15ஆயிரம் ஊழியர்களை கைவிடுகிறது ரெனால்ட் நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.