ETV Bharat / state

அதிராம்பட்டினத்தில் 200 மீட்டா் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்..! மீனவர்கள் அச்சம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 3:16 PM IST

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் நேற்று (டிச.18) காலை திடீரென சுமாா் 200 மீட்டா் தூரத்துக்கு கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

அதிராம்பட்டினத்தில் 200 மீட்டா் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்
அதிராம்பட்டினத்தில் 200 மீட்டா் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்
அதிராம்பட்டினத்தில் 200 மீட்டா் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அடுத்த கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

புயல் எச்சரிக்கை காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோரக் குழுமப் போலீசாா் எச்சரிக்கை விடுத்த நிலையில், நாட்டுப் படகு மீனவா்கள் கடந்த இரு தினங்களாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கடல், சீற்றத்துடனும், அதிவேகக் காற்றுடனும் காணப்பட்டு வந்துள்ளது.

ஆனால், நேற்று காலை திடீரென கடல் 200 மீட்டா் தூரம் உள்வாங்கியதால் மீனவா்கள் மற்றும் கடலோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதி விசைப்படகுகள், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் ரேஸ் மடி வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடிப்பதாக நாட்டுப் படகு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், விசைப்படகு மீனவர்கள் அரசின் உத்தரவை மீறி மீன்பிடிப்பதோடு, நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை அறுத்து விடுகின்றனர். எனவே, அரசு சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடல் 200 மீட்டா் தூரம் உள்வாங்கியுள்ள நிலையில், எந்த நேரத்திலும் மீண்டும் கடல் சீற்றம் ஏற்படலாம் என்ற அச்சத்தில், நாட்டுப் படகு மீனவர்கள் தங்களது படகுகளைத் துறைமுக வாய்க்காலில் பாதுகாப்பாகக் கட்டி வைத்துள்ளனர். இதனால் பட்டுக்கோட்டை கடற் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், கழுமம்குடா, காரங்குடா பகுதியில் உள்ள 10 ஆயிரம் மீனவர்கள், மூன்றாவது நாளாகக் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. வங்கக்கடலில் வளிமண்டலம் கீழடுக்கு சுழற்சி காரணமாகக் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், கடல் சீற்றமாகக் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "குழந்தைகளுக்காவது உணவு கொடுங்கள்" ரயிலில் சிக்கிய 500 பேர் தவிப்பு.. மீட்பு நிலவரம் என்ன?

அதிராம்பட்டினத்தில் 200 மீட்டா் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அடுத்த கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

புயல் எச்சரிக்கை காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோரக் குழுமப் போலீசாா் எச்சரிக்கை விடுத்த நிலையில், நாட்டுப் படகு மீனவா்கள் கடந்த இரு தினங்களாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கடல், சீற்றத்துடனும், அதிவேகக் காற்றுடனும் காணப்பட்டு வந்துள்ளது.

ஆனால், நேற்று காலை திடீரென கடல் 200 மீட்டா் தூரம் உள்வாங்கியதால் மீனவா்கள் மற்றும் கடலோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதி விசைப்படகுகள், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் ரேஸ் மடி வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடிப்பதாக நாட்டுப் படகு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், விசைப்படகு மீனவர்கள் அரசின் உத்தரவை மீறி மீன்பிடிப்பதோடு, நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை அறுத்து விடுகின்றனர். எனவே, அரசு சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடல் 200 மீட்டா் தூரம் உள்வாங்கியுள்ள நிலையில், எந்த நேரத்திலும் மீண்டும் கடல் சீற்றம் ஏற்படலாம் என்ற அச்சத்தில், நாட்டுப் படகு மீனவர்கள் தங்களது படகுகளைத் துறைமுக வாய்க்காலில் பாதுகாப்பாகக் கட்டி வைத்துள்ளனர். இதனால் பட்டுக்கோட்டை கடற் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், கழுமம்குடா, காரங்குடா பகுதியில் உள்ள 10 ஆயிரம் மீனவர்கள், மூன்றாவது நாளாகக் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. வங்கக்கடலில் வளிமண்டலம் கீழடுக்கு சுழற்சி காரணமாகக் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், கடல் சீற்றமாகக் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "குழந்தைகளுக்காவது உணவு கொடுங்கள்" ரயிலில் சிக்கிய 500 பேர் தவிப்பு.. மீட்பு நிலவரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.