ETV Bharat / state

அரசு கல்லூரி மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல் - நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

author img

By

Published : Nov 17, 2022, 7:02 PM IST

தென்காசி பேருந்து நிலையத்தில் சில தினங்களாகவே ரவுடிகள் சிலர் அரசுக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு கல்லூரி மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல் -  நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?
அரசு கல்லூரி மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல் - நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் உள்ளது காமராஜர் அரசு கலைக்கல்லூரி, இக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல கிராமங்களில் இருந்தும் வந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பும், நேற்றும்(நவ-16) ஒரு சில ரவுடிகள் இந்த கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ரவுடிகளால் தொல்லை இருப்பதாகவும், நடவடிக்கை எடுக்க கோரியும் சில மாணவர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். இருப்பினும் நேற்று (நவ-16) காலை கல்லூரி செல்ல காத்துக் கொண்டிருந்த சில மாணவர்களை குறிவைத்து அந்த ரவுடிகள் தாக்கத் தொடங்கினர்.

மேலும் அங்கிருந்த மாணவர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர். பேருந்து நிலையமே சிறிது நேரத்தில் கலவரமாக மாறியது. அங்கு பாதுகாப்பிற்கு காவலர்கள் யாரும் இல்லாததால் தான் இந்த தாக்குதல் நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் ரவுடிகளின் அத்துமீறலை அடக்க வேண்டும் என மாணவர்கள் கூறி வருகின்றனர்.

அரசு கல்லூரி மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல் - நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

இதையும் படிங்க:கோவை சுயம்வரம் நிகழ்ச்சியில் 'சொத்து' ஏலம்.. வைரலாகும் இளைஞரின் புலம்பல் வீடியோ!

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் உள்ளது காமராஜர் அரசு கலைக்கல்லூரி, இக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல கிராமங்களில் இருந்தும் வந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பும், நேற்றும்(நவ-16) ஒரு சில ரவுடிகள் இந்த கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ரவுடிகளால் தொல்லை இருப்பதாகவும், நடவடிக்கை எடுக்க கோரியும் சில மாணவர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். இருப்பினும் நேற்று (நவ-16) காலை கல்லூரி செல்ல காத்துக் கொண்டிருந்த சில மாணவர்களை குறிவைத்து அந்த ரவுடிகள் தாக்கத் தொடங்கினர்.

மேலும் அங்கிருந்த மாணவர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர். பேருந்து நிலையமே சிறிது நேரத்தில் கலவரமாக மாறியது. அங்கு பாதுகாப்பிற்கு காவலர்கள் யாரும் இல்லாததால் தான் இந்த தாக்குதல் நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் ரவுடிகளின் அத்துமீறலை அடக்க வேண்டும் என மாணவர்கள் கூறி வருகின்றனர்.

அரசு கல்லூரி மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல் - நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

இதையும் படிங்க:கோவை சுயம்வரம் நிகழ்ச்சியில் 'சொத்து' ஏலம்.. வைரலாகும் இளைஞரின் புலம்பல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.