தென்காசி: விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் ராமர். இவர் ஏழாயிரம் பண்ணையில் உள்ள நாடார் மகிமை மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் சங்கரன்கோவிலில் இருந்து தனது சொந்த ஊருக்கு நேற்று(ஜன.28) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இவரின் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற காவலர்கள் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடா்பாக திருவேங்கடம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதையும் படிங்க: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!