ETV Bharat / state

குற்றாலத்தில் அதிகரிக்கும் கட்டணக் கொள்ளை - கிலோமீட்டருக்கு 100 ரூபாய் கேட்பதால் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்! - தென்காசி மாவட்ட செய்தி

பழைய குற்றால அருவிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஆட்டோ ஓட்டுநர்களுடன் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம் செய்த காட்சி வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 12, 2023, 4:40 PM IST

குற்றாலத்தில் அதிகரிக்கும் கட்டண கொள்ளை

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு மாத காலம் தாமதமாக ஜூலை மாதம் தொடங்கியது குற்றால சீசன். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக காணப்படுகிறது.

இருப்பினும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிக அளவிலேயே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழைய குற்றால அருவிகளில் கார் பார்க்கிங், கடைகள் என அதிகளவு ஏல முறையில் எடுத்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கார் பார்க்கிங் கட்டண வசூலாக 20 முதல் 100 வரை வசூல் செய்யப்படுகிறது.

அவ்வாறு கார் பார்க்கிங் கட்டணம் குறிப்பிட்ட கிலோ மீட்டர் முன்னதாகவே வசூல் செய்வதால் விடுதிகளுக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் கட்டணம் செலுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் குளிப்பதற்கு கார்களில், வேன்களில் வரும் சுற்றுலா பயணிகளிடம் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதுடன் அருவிகளில் மேற்பகுதியில் இடம் இருந்தும், அதனை அருவிகளின் அருகே வரை அனுமதிக்கப்படாத நிலை நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: சொத்துத் தகராறில் அண்ணன் மகனை கொலை செய்த நபர் - நடந்தது என்ன?

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றால அருவி வரை செல்ல ரூபாய் 100 வரை தனியாக வசூல் செய்து வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளாது அலட்சியமாக செயல்படுகின்றனர்.

ஏழைகளின் சுற்றுலாத்தலமாக இருக்கக்கூடிய குற்றால அருவிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள், வயதானவர்கள் கார் பார்க்கிங் கட்டணம் செலுத்துவதுடன், அருவி அருகே செல்ல ஆட்டோக்கும் பணத்தை செலுத்தும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் ஒருவருடன் ஆட்டோ ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி தற்போது வைரலாகி வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: மனநல காப்பகத்தில் மாஜி விஏஓ மகன் துன்புறுத்தப்பட்டதாக புகார்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

குற்றாலத்தில் அதிகரிக்கும் கட்டண கொள்ளை

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு மாத காலம் தாமதமாக ஜூலை மாதம் தொடங்கியது குற்றால சீசன். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக காணப்படுகிறது.

இருப்பினும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிக அளவிலேயே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழைய குற்றால அருவிகளில் கார் பார்க்கிங், கடைகள் என அதிகளவு ஏல முறையில் எடுத்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கார் பார்க்கிங் கட்டண வசூலாக 20 முதல் 100 வரை வசூல் செய்யப்படுகிறது.

அவ்வாறு கார் பார்க்கிங் கட்டணம் குறிப்பிட்ட கிலோ மீட்டர் முன்னதாகவே வசூல் செய்வதால் விடுதிகளுக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் கட்டணம் செலுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் குளிப்பதற்கு கார்களில், வேன்களில் வரும் சுற்றுலா பயணிகளிடம் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதுடன் அருவிகளில் மேற்பகுதியில் இடம் இருந்தும், அதனை அருவிகளின் அருகே வரை அனுமதிக்கப்படாத நிலை நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: சொத்துத் தகராறில் அண்ணன் மகனை கொலை செய்த நபர் - நடந்தது என்ன?

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றால அருவி வரை செல்ல ரூபாய் 100 வரை தனியாக வசூல் செய்து வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளாது அலட்சியமாக செயல்படுகின்றனர்.

ஏழைகளின் சுற்றுலாத்தலமாக இருக்கக்கூடிய குற்றால அருவிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள், வயதானவர்கள் கார் பார்க்கிங் கட்டணம் செலுத்துவதுடன், அருவி அருகே செல்ல ஆட்டோக்கும் பணத்தை செலுத்தும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் ஒருவருடன் ஆட்டோ ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி தற்போது வைரலாகி வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: மனநல காப்பகத்தில் மாஜி விஏஓ மகன் துன்புறுத்தப்பட்டதாக புகார்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.