ETV Bharat / state

மக்கள் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்

author img

By

Published : Aug 5, 2019, 7:30 AM IST

சிவகங்கை: ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

Solid Waste Management Program

தமிழ்நாட்டில் முதல்முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் குடியிருப்பு பகுதியில் செயல்படுத்துவது இதுவே முதல் முறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார். இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் மக்கும் குப்பையை உரமாகவும், மக்கா குப்பையை மறுசுழற்சி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

இதன் மூலம் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும்,இதில் உலக கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத்தந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் தனராஜ்க்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் ஆட்சியர் ஜெயகாந்தன், காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித் நாதன் இந்திய கபடி வீரர் தனராஜ் மற்றும் அலுவலர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் குடியிருப்பு பகுதியில் செயல்படுத்துவது இதுவே முதல் முறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார். இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் மக்கும் குப்பையை உரமாகவும், மக்கா குப்பையை மறுசுழற்சி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

இதன் மூலம் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும்,இதில் உலக கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத்தந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் தனராஜ்க்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் ஆட்சியர் ஜெயகாந்தன், காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித் நாதன் இந்திய கபடி வீரர் தனராஜ் மற்றும் அலுவலர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

Intro:தமிழகத்தில் முதல்முறையாக!

மக்கள் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவக்கம்!!

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் சிவகங்கை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார். Body:தமிழகத்தில் முதல்முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் குடியிருப்பு பகுதியில் செயல்படுத்துவது இதுவே முதல் முறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார். இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை, என தரம் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இரு பிரிவாக சேமிக்கப்பட்டு, மக்கும் குப்பை உரமாகவும், மக்கா குப்பையை மறுசுழற்சி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார். மேலும் இதன் மூலம் நெகிழி எனும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இவ்விழாவில் மலேசியாவில் நடைபெற்ற உலக கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத்தந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் தனராஜ்க்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. Conclusion:முன்னதாக ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித் நாதன் இந்திய கபடி வீரர் தனராஜ் மற்றும் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.