சிவகங்கை மாவட்டம் கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரின் உடல் ஏப்ரல் 18ஆம் தேதி கருங்காலக்குடி கண்மாய்கரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக திருபுவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தாங்கள்தான் குற்றவாளி என ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் தமிழ்ச்செல்வன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் மதுரை மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.