ETV Bharat / state

‘கீழடியை தமிழர் நாகரிகம் என்று பிரிக்கக் கூடாது’ - அமைச்சர் பாண்டியராஜன்

author img

By

Published : Sep 27, 2019, 3:23 PM IST

சிவகங்கை: கீழடியை தமிழர் நாகரிகம் என்று தனித்து பார்ப்பது தவறு, இந்திய நாகரிகத்தின் அடிக்கட்டுமானம்தான் கீழடி என்று தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

mafoi

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் இன்று நேரில் ஆய்வு மேற்கொன்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கீழடியைப் பொறுத்தவரை 1961ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவற்றில் 30 இடங்களில் ஒருமுறையும் 10 இடங்களில் இரண்டுக்கு மேற்பட்ட முறையும் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன.

கீழடியைப் பொருத்தவரை இது ஒரு சங்ககால தொழில் நகர நாகரிகம். பொதுவாக இங்கு இரண்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிடைத்த தொழில் பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பிதான் ஆய்வு செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. இந்தியாவிலேயே அதனை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

அமைச்சர் கே. பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு

உலக வரலாற்றில் கீழடி அகழ்வாராய்ச்சி மிக முக்கியமானது, தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளை ஒருங்கிணைத்து ஒரே அறிக்கையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே சிலிக்கா என்கிற உயர்தர மணல் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இருந்துள்ளது. கட்டுமானத்தில் அலுமினியம் பயன்படுத்தி உள்ளனர், கீழடியில் உள்ள கீறல்களுக்கும் சிந்துவெளி நாகரிகத்துக்கும் ஒற்றுமை உள்ளது.

வெகு விரைவில் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்படும். மத்திய அரசு தமிழர்களின் நாகரிகத்தை நசுக்கவில்லை. கீழடியை தமிழ் நாகரிகம் என்று தனித்துப் பார்ப்பது தவறு, இந்திய நாகரிகத்தின் அடிக்கட்டுமானம்தான் கீழடி” எனக் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் இன்று நேரில் ஆய்வு மேற்கொன்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கீழடியைப் பொறுத்தவரை 1961ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவற்றில் 30 இடங்களில் ஒருமுறையும் 10 இடங்களில் இரண்டுக்கு மேற்பட்ட முறையும் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன.

கீழடியைப் பொருத்தவரை இது ஒரு சங்ககால தொழில் நகர நாகரிகம். பொதுவாக இங்கு இரண்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிடைத்த தொழில் பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பிதான் ஆய்வு செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. இந்தியாவிலேயே அதனை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

அமைச்சர் கே. பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு

உலக வரலாற்றில் கீழடி அகழ்வாராய்ச்சி மிக முக்கியமானது, தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளை ஒருங்கிணைத்து ஒரே அறிக்கையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே சிலிக்கா என்கிற உயர்தர மணல் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இருந்துள்ளது. கட்டுமானத்தில் அலுமினியம் பயன்படுத்தி உள்ளனர், கீழடியில் உள்ள கீறல்களுக்கும் சிந்துவெளி நாகரிகத்துக்கும் ஒற்றுமை உள்ளது.

வெகு விரைவில் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்படும். மத்திய அரசு தமிழர்களின் நாகரிகத்தை நசுக்கவில்லை. கீழடியை தமிழ் நாகரிகம் என்று தனித்துப் பார்ப்பது தவறு, இந்திய நாகரிகத்தின் அடிக்கட்டுமானம்தான் கீழடி” எனக் கூறினார்.

Intro:கீழடி பாரத நாகரிகமே - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

கீழடி பாரத நாகரிகத்தின் தொடர்ச்சியே. அதனை தமிழ் நாகரிகம் என்று தனித்து பார்ப்பது தவறு இந்திய நாகரிகத்தின் அடிக்கட்டுமானம் தான் கீழடி என்று தமிழக பண்பாடு மற்றும் மொழி வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி
Body:கீழடி பாரத நாகரிகமே - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

கீழடி பாரத நாகரிகத்தின் தொடர்ச்சியே. அதனை தமிழ் நாகரிகம் என்று தனித்து பார்ப்பது தவறு இந்திய நாகரிகத்தின் அடிக்கட்டுமானம் தான் கீழடி என்று தமிழக பண்பாடு மற்றும் மொழி வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்தில் தமிழக தொல்லியல் துறையால் நடைபெற்று வரும் கிரேடு ஐந்தாம் பட்ட ஆய்வினை நிறைவு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதனை பார்வையிடுவதற்காக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடியை பொறுத்தவரை தமிழக அரசு நாற்பதாவது இடத்தில் தற்போது அறுபதாவது அகழாய்வு பணியை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளது. இப்பணிகள் 1961 ஆம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் 30 இடங்களில் ஒரு முறையும் 10 இடங்களில் இரண்டுக்கு மேற்பட்ட முறையும் அகல் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் அழகன்குளத்தில் மட்டும் ஏழுமுறை அகழாய்வு செய்யப்பட்டுள்ளன

கீழடியை பொருத்தவரை இது ஒரு சங்க கால தொழில் நகர நாகரிகம். பொதுவாக இங்கு இரண்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன கரிம பகுப்பாய்வு முறை மற்றொன்று ஒளி மூலம் கண்டறிதல். ஒளி மூலம் கண்டறிகின்றனர் என்ற புதிய முறையை முதன் முறையாக கீழடியில் பயன்படுத்தியுள்ளோம். முதல் இரண்டு கட்டத்தில் மத்திய அரசால் நடைபெற்ற அகலாய்வு பணியின் அறிக்கைகளும் பெறப்பட்டு தான் தமிழக தொழில்துறை தற்போதைய இடைக்கால அறிக்கையை அறிக்கையை தயாரித்துள்ளது.

கிடைத்த தொழில் பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பி தான் ஆய்வு செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை இந்தியாவிலேயே அதனை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன ஆகையால் நான்கு ஐந்தாம் கட்ட ஆய்வு அறிக்கை முழுமையாக தயார் செய்யப்படும்.

வான் வழி, தரை வழி என 11 முறையில் ஆய்வு செய்துள்ளோம். உலக வரலாற்றில் கீழடி அகழ்வாராய்ச்சி மிக முக்கியமானது, தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளை ஒருங்கிணைந்து ஒரே அறிக்கையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2600 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே சிலிக்கா என்கிற உயர்தர மணல் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இருந்துள்ளது. கட்டுமானத்தில் அலுமினியம் பயன்படுத்தி உள்ளனர், கீழடியில் உள்ள கீறல்களுக்கும் சிந்துவெளி நாகரீகத்துக்கும் ஒற்றுமை. 2600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தறிவு, மொழி இருந்துள்ளது., நெசவுத்தொழில் தொழில் நடந்த எச்சங்கள் உள்ளன, தங்க பொருட்கள் மற்றும் பகடைக்காய் போன்ற விளையாட்டு பொருட்கள் கிடைத்துள்ளன.

வெகு விரைவில் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்படும், கீழடி அகழாய்வில் மத்திய தொல்லியல்துறையின் வசம் உள்ள 8 ஆயிரம் பொருட்கள் தமிழக தொல்லியல்துறையிடம் வழங்க உள்ளனர்,

கீழடியில் 15 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்படும், புதுக்கோட்டை, உதகை, திருநெல்வேலி உள்ளிட்ட 4 இடங்களில் 12 கோடியில் அருங்காட்சியகம், திருமலை நாயக்கர் மஹாலை உலக தரத்திற்கு மாற்ற மத்திய அரசிடம் நிதி கோரி உள்ளோம், மத்திய அரசு நிதிக்காக கீழடி அகழ்வாராய்ச்சியில் தொய்வு வரக்கூடாது என முதல்வர் கூறி உள்ளார், கீழடி மட்டுமல்லாமல் மணலூர், அகரம், கொந்தகை அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி கேட்டு உள்ளோம்,

மத்திய அரசு தமிழர்களின் நாகரீகத்தை நசுக்கவில்லை, கிழக்கு தொடர்ச்சி மழையில் அகழ்வாராய்ச்சி செய்யப்படும், அதேபோன்று ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை 2 மாதத்தில் வெளியிடப்படும், இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் கல்வெட்டுகள் உள்ளன,

திருச்சியில் மத்திய தொல்லியல்துறை அலுவலகம் விரைவில் கொண்டு வர உள்ளனர், தமிழக தொல்லியல்துறையில் 9 ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர், மத்திய தொல்லியல்துறை ஆய்வாளர்களுடன் இணைந்து பணிகள் நடைபெறுகிறது

மதுரை காமராசர், காரைக்குடி அழகப்பா, அமெரிக்க ஹார்டுவேர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அகழாய்வு பணிகள் நடைபெறும். கார்பன் டேட்டீங் பரிசோதனை 15 நாட்களில் ஆய்வு செய்ய முடியும், தமிழகத்தில் 1 லட்சத்து 35 ஆயிரம் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது, கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை, டிஸ்னி வேல்டு மாதிரி கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என கூறினார்

இதன் போது தமிழக கைத்தறித் துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தொல்லியல் துறை உதவி இயக்குனர் சிவானந்தம் கீழடி அகழாய்வு பொறுப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் உடனிருந்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.