ETV Bharat / state

பொன்னமராவதி விவகாரம்: சிவகங்கையில் பரவும் போராட்டம்! - பொன்னமராவதி

சிவகங்கை: குறிப்பிட்ட சமூக பெண்கள் குறித்து வாட்ஸ் அப் - பில் தவறாக பேசிய விவகாரத்தைக் கண்டித்து சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அச்சமூக மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை
author img

By

Published : Apr 20, 2019, 1:18 PM IST

குறிப்பிட்ட சமூக பெண்கள் குறித்து தவறாக வாட்ஸ் அப்பில் வெளியான விவகாரம் தொடர்பாக பொன்னமராவதியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெண்கள் குறித்து தவறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டவரை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் சிங்கம்புணரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மறியல் போராட்டம்

இந்த மறியலைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் கைகளில் துடைப்பத்துடன் கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் சிங்கம்புணரி காவல்நிலையம் அருகே சென்றபோது, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் இப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட சமூக பெண்கள் குறித்து தவறாக வாட்ஸ் அப்பில் வெளியான விவகாரம் தொடர்பாக பொன்னமராவதியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெண்கள் குறித்து தவறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டவரை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் சிங்கம்புணரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மறியல் போராட்டம்

இந்த மறியலைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் கைகளில் துடைப்பத்துடன் கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் சிங்கம்புணரி காவல்நிலையம் அருகே சென்றபோது, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் இப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை  ஆனந்த்
ஏப்ரல்.20

விஸ்வரூபம் எடுக்கும் பொன்னமராவதி பிரச்சினை - சிவகங்கையில் பரவும் போராட்டம்

சிவகங்கை: ஒரு சமூக பெண்கள் குறித்து வாட்ஷாப்பில் சிலர் தவறாக பேசிய விவகாரம் தொடர்பாக பொன்னமராவதியில் போராட்டம் நடந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அச்சமூக மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரவதியில் வாட் ஷாப்பில் ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக வந்த செய்தியை அடுத்து பல்வேறு பகுதிகளில், மற்றொரு சமூகத்தினர் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட சமூக பெண்களை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரை கைது செய்யக்கோரி, அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெண்கள் உட்பட சுமார் 1000 ற்கும் மேற்பட்டவர்கள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 
சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 

இதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததையடுத்து, நகரில் ஊர்வலமாக சென்றனர். இதில் பெண்கள் அனைவரும் கைகளில் கூட்டுமாரை எடுத்துக் கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். அவர்களை போலீஸார் சிங்கம்புணரி காவல் நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர் பின்பு இரண்டு நாள்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக போலீஸார் உறுதி மொழி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

இவர்களின் போராட்டத்தையடுத்து சிங்கம்புணரி கடை வீதிகளில் உள்ள கடைகள் சில மணி நேரம் அடைக்கப்பட்டன. மேலும் அருகில் உள்ள பகுதிகளுக்கும் போராட்டம் பரவி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.