ETV Bharat / state

கொல்லங்குடி அருகே கண்டெடுக்கப்பட்ட தங்கத்தால் ஆன 2 குண்டுமணிகள் - தொல்லியல் துறையில் ஒப்படைப்பு

author img

By

Published : Jun 27, 2022, 1:09 PM IST

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் சிவகங்கை தொல் நடைக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தாலான பழமையான குண்டுமணி போன்ற குழாய் பொருள்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தொல்லியல் துறை
தொல்லியல் துறை

சிவகங்கை: களையார்கோவில் அருகே கொல்லங்குடி ஊராட்சியில் 'சிவகங்கை தொல் நடைக்குழு'வினர் நேற்று (ஜூன்26) மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே கிடைத்த தங்கத்தாலான குண்டுமணிகள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தொல்லியல் சார்ந்த செய்திகளை மக்களிடம் பரப்புதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மற்றும் தொன்மையானவற்றை பாதுகாத்தல், போன்ற பணிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தொடர்ந்து செய்து வருவதாக சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கொல்லங்குடி ஊராட்சி, சுந்தனேந்தல்சேகரம்-உசிலனேந்தல் கண்மாய் பகுதியில், நேற்று முன்தினம் (25.06.2022) சிவகங்கை தொல்நடைக்குழு உறுப்பினர் சரவணன் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே தங்கம் போன்ற இரண்டு பொருள்கள் கிடைத்தன. பின், அங்கு சென்று மேற்கொண்ட விரிவான ஆய்வில், தாலி போன்ற கயிற்று சரடில் கோர்த்து அணியக்கூடிய குண்டுமணி எனப்படும் அணிகலனாக இருக்கலாம் என்பது ஆய்வில் தெரிய வந்தது.

சிவகங்கை தொல் நடைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பகுதி
சிவகங்கை தொல் நடைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பகுதி

குழாய் போன்று நீண்டு இல்லாமலும் மணி போன்று சிறிய அளவினதாக இல்லாமலும் இடைப்பட்டதாக உள்ளது. மேலும், மத்தளத்தைப் போன்ற வடிவம் உடையதாக இருபக்கம் சிறியதாகவும் நடுப்பகுதி பெரியதாகவும் காணப்படுகிறது. இரு பக்கமுனைகளிலும் நடுப்பகுதியிலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

கொல்லங்குடி ஊராட்சியில் முதுமக்கள் தாழிகள் நிறைந்த பகுதி
கொல்லங்குடி ஊராட்சியில் முதுமக்கள் தாழிகள் நிறைந்த பகுதி

குண்டுமணி-குழாய்: திருமணமாகிய பெண்கள் அணியும் தாலி சரடினுள் நுழைத்து கோர்க்க பயன்படும் தங்கத்தாலான இப்பொருள்களுள் நீண்டு குழாய்போல் இருப்பதால் யானைக் குழாய் என்றும் குழாய் என்றும் அழைப்பர். மேலும், நீட்சி இல்லாமல் சிறிய அளவில் உள்ளதை மணி என்றும் குண்டுமணி என்றும் அழைக்கின்றனர்.

பழமையான மணிக்குழாய்: ஒன்று பார்வைக்கு நல்ல நிலையிலும் மற்றொன்று சிதைந்த நிலையிலும் காணப்படுகிறது. இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்ததாலும், ஒன்று சிதைவுற்று இருப்பதாலும் இது பழமையானதாக இருக்கலாம், முதுமக்கள் தாழிக்குள் இருந்து வெகு நாட்பட்டு ஓடுகளோடு வெளிப்பட்டிருக்கலாம் என எண்ண முடிகிறது.

சிவகங்கை தொல் நடைக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட பழமையான தங்க ஆபரணங்கள்
சிவகங்கை தொல் நடைக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட பழமையான தங்க ஆபரணங்கள்

இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் முற்றிலும் சிதைந்த நிலையில் வெறும் ஓடுகளாய் நிலங்களின் மேற்பரப்பில் பரந்து மேடுகளாக அடுத்தடுத்து காணப்படுகின்றன. இந்த மேடுகளில் சுண்ணாம்புக் கற்கள் மேலெழும்பி அதிக அளவில் இருப்பதால் தாழி புதைத்த இடங்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

விரிவான ஆய்வு: கண்டெடுத்த இரண்டு குண்டுமணிகள் குறித்து தொல்லியல் துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தொல்லியல் துறை ஆணையர் முழு கூடுதல் பொறுப்பு இரா.சிவானந்தம் வழிகாட்டுதலின்படி, சிவகங்கை மாவட்ட தொல்லியல் அலுவலர் பரத் குமார், ராமநாதபுர மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ் ஆகியோரிடம் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தாலான பழமையான குழாய் போன்ற பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும் இப்பொருள் பற்றி தொல்லியல் துறையினரின் விரிவான ஆய்வுக்குப் பிறகு இறுதி முடிவு எட்டப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்
மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்

வருவாய்த்துறை உதவியாளர் சுரேஷ், சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன், பொருளாளர் ம. பிரபாகரன், உறுப்பினர் கா.சரவணன், செயற்குழு உறுப்பினர் உ.முத்துக்குமார், தொல்நடைக் குழுவைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சுடுமண்ணாலான பகடைக்காய்-அகழ்வாய்வில் வெளிவந்த அதிசயம்..!

சிவகங்கை: களையார்கோவில் அருகே கொல்லங்குடி ஊராட்சியில் 'சிவகங்கை தொல் நடைக்குழு'வினர் நேற்று (ஜூன்26) மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே கிடைத்த தங்கத்தாலான குண்டுமணிகள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தொல்லியல் சார்ந்த செய்திகளை மக்களிடம் பரப்புதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மற்றும் தொன்மையானவற்றை பாதுகாத்தல், போன்ற பணிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தொடர்ந்து செய்து வருவதாக சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கொல்லங்குடி ஊராட்சி, சுந்தனேந்தல்சேகரம்-உசிலனேந்தல் கண்மாய் பகுதியில், நேற்று முன்தினம் (25.06.2022) சிவகங்கை தொல்நடைக்குழு உறுப்பினர் சரவணன் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே தங்கம் போன்ற இரண்டு பொருள்கள் கிடைத்தன. பின், அங்கு சென்று மேற்கொண்ட விரிவான ஆய்வில், தாலி போன்ற கயிற்று சரடில் கோர்த்து அணியக்கூடிய குண்டுமணி எனப்படும் அணிகலனாக இருக்கலாம் என்பது ஆய்வில் தெரிய வந்தது.

சிவகங்கை தொல் நடைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பகுதி
சிவகங்கை தொல் நடைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பகுதி

குழாய் போன்று நீண்டு இல்லாமலும் மணி போன்று சிறிய அளவினதாக இல்லாமலும் இடைப்பட்டதாக உள்ளது. மேலும், மத்தளத்தைப் போன்ற வடிவம் உடையதாக இருபக்கம் சிறியதாகவும் நடுப்பகுதி பெரியதாகவும் காணப்படுகிறது. இரு பக்கமுனைகளிலும் நடுப்பகுதியிலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

கொல்லங்குடி ஊராட்சியில் முதுமக்கள் தாழிகள் நிறைந்த பகுதி
கொல்லங்குடி ஊராட்சியில் முதுமக்கள் தாழிகள் நிறைந்த பகுதி

குண்டுமணி-குழாய்: திருமணமாகிய பெண்கள் அணியும் தாலி சரடினுள் நுழைத்து கோர்க்க பயன்படும் தங்கத்தாலான இப்பொருள்களுள் நீண்டு குழாய்போல் இருப்பதால் யானைக் குழாய் என்றும் குழாய் என்றும் அழைப்பர். மேலும், நீட்சி இல்லாமல் சிறிய அளவில் உள்ளதை மணி என்றும் குண்டுமணி என்றும் அழைக்கின்றனர்.

பழமையான மணிக்குழாய்: ஒன்று பார்வைக்கு நல்ல நிலையிலும் மற்றொன்று சிதைந்த நிலையிலும் காணப்படுகிறது. இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்ததாலும், ஒன்று சிதைவுற்று இருப்பதாலும் இது பழமையானதாக இருக்கலாம், முதுமக்கள் தாழிக்குள் இருந்து வெகு நாட்பட்டு ஓடுகளோடு வெளிப்பட்டிருக்கலாம் என எண்ண முடிகிறது.

சிவகங்கை தொல் நடைக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட பழமையான தங்க ஆபரணங்கள்
சிவகங்கை தொல் நடைக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட பழமையான தங்க ஆபரணங்கள்

இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் முற்றிலும் சிதைந்த நிலையில் வெறும் ஓடுகளாய் நிலங்களின் மேற்பரப்பில் பரந்து மேடுகளாக அடுத்தடுத்து காணப்படுகின்றன. இந்த மேடுகளில் சுண்ணாம்புக் கற்கள் மேலெழும்பி அதிக அளவில் இருப்பதால் தாழி புதைத்த இடங்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

விரிவான ஆய்வு: கண்டெடுத்த இரண்டு குண்டுமணிகள் குறித்து தொல்லியல் துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தொல்லியல் துறை ஆணையர் முழு கூடுதல் பொறுப்பு இரா.சிவானந்தம் வழிகாட்டுதலின்படி, சிவகங்கை மாவட்ட தொல்லியல் அலுவலர் பரத் குமார், ராமநாதபுர மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ் ஆகியோரிடம் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தாலான பழமையான குழாய் போன்ற பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும் இப்பொருள் பற்றி தொல்லியல் துறையினரின் விரிவான ஆய்வுக்குப் பிறகு இறுதி முடிவு எட்டப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்
மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்

வருவாய்த்துறை உதவியாளர் சுரேஷ், சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன், பொருளாளர் ம. பிரபாகரன், உறுப்பினர் கா.சரவணன், செயற்குழு உறுப்பினர் உ.முத்துக்குமார், தொல்நடைக் குழுவைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சுடுமண்ணாலான பகடைக்காய்-அகழ்வாய்வில் வெளிவந்த அதிசயம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.