ETV Bharat / state

நீரோடையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு - பொதுமக்கள் குற்றச்சாட்டு

சேலம்: இளம்பிள்ளை அருகே நீரோடையை ரியல்எஸ்டேட் தொழிலுக்காக தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

author img

By

Published : Sep 26, 2019, 8:18 PM IST

நீரோடையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழுமாத்தனூர், ஜெயம் கார்னர் பகுதிக்கு கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து வரும் நீரோடையை தனிநபர்கள் ரியஸ்எஸ்டேட் தொழிலுக்காக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஏரி, குளம், குட்டைகளுக்கு நீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ," இடங்கணசாலை இப்பகுதியில் உள்ள காடையாம்பட்டி ஏரிக்கு வரும் நீரோடைகள் பல இடங்களில் தனிநபர்களின் நலனுக்காக ஆக்கிரமித்து அடைப்பு ஏற்படுத்தி விட்டதால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து பல முறை வருவாய்த்துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகமும், வருவாய்த்துறை நிர்வாகமும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழுமாத்தனூர், ஜெயம் கார்னர் பகுதிக்கு கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து வரும் நீரோடையை தனிநபர்கள் ரியஸ்எஸ்டேட் தொழிலுக்காக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஏரி, குளம், குட்டைகளுக்கு நீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ," இடங்கணசாலை இப்பகுதியில் உள்ள காடையாம்பட்டி ஏரிக்கு வரும் நீரோடைகள் பல இடங்களில் தனிநபர்களின் நலனுக்காக ஆக்கிரமித்து அடைப்பு ஏற்படுத்தி விட்டதால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து பல முறை வருவாய்த்துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகமும், வருவாய்த்துறை நிர்வாகமும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:சேலம் அடுத்த இளம்பிள்ளை அருகே, நீரோடையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
Body:

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழுமாத்தனூர், ஜெயம் கார்னர் பகுதியில் தனிநபர்கள் கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து வரும் நீரோடையை வழிமறித்து ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அகலமாக உள்ள நீரோடையை சிறியதாக அமைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பகீர் புகார் அளித்துள்ளனர்.

ஓடை ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் உள்ள ஏரி, குளம் ,குட்டைகளுக்கு மலை நீர் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்துவதால் மழைநீர்
மண் செல்ல முடியாமல் இருந்துவருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ," இடங்கணசாலை இப்பகுதியில் உள்ள காடையாம்பட்டி ஏரிக்கு வரும் நீரோடைகள் பல இடங்களில்
தனிநபர்களின் நலனுக்காக ஆக்கிரமித்து அடைப்பு ஏற்படுத்தி விட்டதால் இப்பகுதிக்கு வரும் தண்ணீர் வருவதில்லை.

இதனால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது . " என்று தெரிவித்தனர்.

மேலும் பொதுமக்கள் ,
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது இனிவரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில்
இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகமும், வருவாய்த்துறைநிர்வாகமும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
இளம்பிள்ளை அருகே ஏழுமாத்தனூர் பகுதியில் கஞ்சமலையிலிருந்து வரும் நீர் ஓடையினை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.