ETV Bharat / state

சேலத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்!

author img

By

Published : Nov 20, 2019, 6:10 PM IST

சேலம்: புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 46 கடைகளின் உரிமையாளர்கள் 36 மாத வாடகை நிலுவை தொகையை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

கடைகளுக்கு சீல் வைப்பு


சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை முதல் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 520 கடைகளுக்கும் வாடகை தொகை சந்தை மதிப்பீட்டில் உயர்த்தப்பட்டது.
இதனையடுத்து உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வலியுறுத்தி வாடகைதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி உயர்த்தப்பட்ட வாடகை தொகையிலிருந்து 25 சதவீதம் குறைத்து வசூலிக்க கடந்த அக்டோபர் 15ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் அதை நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும், அப்படி செலுத்தத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி ஆணையர் பொது ஏலம் விட்டுக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

கடைகளுக்கு சீல் வைப்பு

அதன்படி நான்கு வார கால அவகாசம் கொடுத்து அதில் சிலர் வாடகை நிலுவை தொகையை கட்டினர். 46 கடைக்காரர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி 36 மாத நிலுவை தொகையை, செலுத்தாததால் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 46 கடைகளுக்கும் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் காவல் துறை முண்ணிலையில் சீல் வைத்தனர்.

இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!


சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை முதல் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 520 கடைகளுக்கும் வாடகை தொகை சந்தை மதிப்பீட்டில் உயர்த்தப்பட்டது.
இதனையடுத்து உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வலியுறுத்தி வாடகைதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி உயர்த்தப்பட்ட வாடகை தொகையிலிருந்து 25 சதவீதம் குறைத்து வசூலிக்க கடந்த அக்டோபர் 15ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் அதை நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும், அப்படி செலுத்தத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி ஆணையர் பொது ஏலம் விட்டுக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

கடைகளுக்கு சீல் வைப்பு

அதன்படி நான்கு வார கால அவகாசம் கொடுத்து அதில் சிலர் வாடகை நிலுவை தொகையை கட்டினர். 46 கடைக்காரர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி 36 மாத நிலுவை தொகையை, செலுத்தாததால் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 46 கடைகளுக்கும் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் காவல் துறை முண்ணிலையில் சீல் வைத்தனர்.

இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!

Intro:சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 46 வணிக கடைகள் நீதிமன்ற உத்தரவுபடி 36 மாத கால நிலுவை மற்றும் உயர்த்தப்பட்ட வாடகை செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் வணிக கடைகளுக்கு சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Body:சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை முதல் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 520 கடைகளுக்கும் வாடகை தொகையை சந்தை மதிப்பீட்டில் உயர்த்தப்பட்டது, உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வலியுறுத்தி வாடகைதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உயர்த்தப்பட்ட வாடகை தொகையில் இருந்து 25 சதவீதம் குறைத்து வசூலிக்க கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி உத்தர விட்டு நான்கு வார காலத்திற்கு செலுத்த வேண்டும் எனவும், அப்படி செலுத்தத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி ஆணையம் பொது ஏலம் விட்டுக் கொள்ளலாம் என உத்தரவிட்டது. அதன்படி நான்கு வார கால அவகாசம் கொடுத்து அதில் சிலர் நிலுவை வாடகை தொகை கட்டினர். பல்வேறு வணிக கடைக்காரர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி 36 மாத கால நிலுவை மற்றும் உயர்த்தப்பட்ட வாடகை செலுத்தாததால் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 46 கடைகளுக்கு மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் 46 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதா அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.