ETV Bharat / state

தனியார் பேருந்துடன் அரசுப் பேருந்து மோதல்: தூக்கி வீசப்பட்ட பயணிகள்!

சேலம்: வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் தனியார் பேருந்து மீது அரசுப் பேருந்து மோதியதில் பயணிகள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

author img

By

Published : Oct 22, 2019, 1:50 PM IST

govt-private busses accident

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து சேலத்தை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

தனியார் பேருந்துடன் அரசுப் பேருந்து மோதி விபத்து

அதில் தனியார் பேருந்து பலத்த சேதம் அடைந்த நிலையில், பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் படிக்க: 'போராட்டம் தொடரும்' - தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து சேலத்தை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

தனியார் பேருந்துடன் அரசுப் பேருந்து மோதி விபத்து

அதில் தனியார் பேருந்து பலத்த சேதம் அடைந்த நிலையில், பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் படிக்க: 'போராட்டம் தொடரும்' - தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு!

Intro:
சேலம் மாவட்டம் , வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதல்.

தனியார் பேருந்து பின்பகுதியில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்டோர் காயம்.Body:
சேலம் மாவட்டம் வாழப்பாடி நகருக்குள் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது.

அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது .

இந்த சம்பவத்தில் தனியார் பேருந்து பலத்த சேதம் அடைந்தது.Conclusion:தனியார் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்துகள் மோதல் விபத்து வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.