ETV Bharat / state

சேலத்தில் பள்ளிப் பேருந்துகளில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு - salem private school

சேலம்: தனியார் பள்ளிப் பேருந்துகளில் வருவாய்த் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இன்று தரக்கட்டுப்பாட்டு ஆய்வை மேற்கொண்டனர்.

சேலத்தில் பள்ளி பேருந்துகளுக்கு தரகட்டுப்பாட்டு ஆய்வு நடத்தப்பட்டது
author img

By

Published : May 11, 2019, 9:06 PM IST


தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிப் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தரமற்ற பேருந்துகள், அனுபவமில்லாத ஓட்டுநர்கள், அவசரமாக இயங்கும் பேருந்துகள் என பல்வேறு பிரச்னைகளை பள்ளி நிர்வாகம் சீர் செய்ய தவறி விடுகிறது. இதை சரிசெய்வதற்காக ஆண்டு தோறும் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று சேலம் ஜவகர் திடலில் கோட்டாட்சியர் நெடுஞ்செழியன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மேற்பார்வையில், இந்த வருடத்திற்கான ஆய்வு நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 91 தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான 500க்கும் மேற்பட்ட பேருந்துகளின் தரம், அவசரகால வழிக்கதவுகள், பேருந்தின் நிலை, ஆகியவை குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர். வரும் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 128 பள்ளிப் பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

சேலத்தில் பள்ளி வாகனங்களுக்கு நடத்தப்பட்ட தரக்கட்டுப்பாட்டு ஆய்வு


தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிப் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தரமற்ற பேருந்துகள், அனுபவமில்லாத ஓட்டுநர்கள், அவசரமாக இயங்கும் பேருந்துகள் என பல்வேறு பிரச்னைகளை பள்ளி நிர்வாகம் சீர் செய்ய தவறி விடுகிறது. இதை சரிசெய்வதற்காக ஆண்டு தோறும் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று சேலம் ஜவகர் திடலில் கோட்டாட்சியர் நெடுஞ்செழியன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மேற்பார்வையில், இந்த வருடத்திற்கான ஆய்வு நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 91 தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான 500க்கும் மேற்பட்ட பேருந்துகளின் தரம், அவசரகால வழிக்கதவுகள், பேருந்தின் நிலை, ஆகியவை குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர். வரும் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 128 பள்ளிப் பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

சேலத்தில் பள்ளி வாகனங்களுக்கு நடத்தப்பட்ட தரக்கட்டுப்பாட்டு ஆய்வு
சேலம் 11-05-2019
M.kingmarshal stringer 


சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளை வருவாய்த்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு..........

பேருந்துகள் தரகட்டுப்பாட்டுக்கு உள்ளனவா என்பது குறித்து தனித்தனியே ஆய்வு செய்து சான்றிதழ் அளித்து வருகின்றனர்........

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி பேருந்துகளும் அதிகரித்து வருவதால் விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தரமற்ற பேருந்துகள், அனுபவமில்லாத ஓட்டுநர்கள், அவசரமாக இயங்கும் பேருந்துகள் என பள்ளி நிர்வாகம் மாணவ மாணவிகளை பள்ளிகளுக்குக் கொண்டு வருவதில்லையே குறியாக இருப்பதால் பள்ளி பேருந்து விபத்து அதிகரித்து வந்தது.இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து நடைமுறைப்படுத்தியது இதன்படி ஆண்டுதோறும் பள்ளிப் பேருந்துகள் கட்டாயம் தரச்சான்று களுக்கு உட்படுத்தப்படவேண்டும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட வேண்டும், வேககட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசர வழி போன்ற பல்வேறு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டது. இதன்படி ஆண்டுதோறும் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி பேருந்துகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சேலம் கோட்டாட்சியர் நெடுஞ்செழியன் தலைமையில் வட்டார போக்குவரத்து அதிகாரி தாமோதரன் மேற்பார்வையில் இந்த ஆய்வு நடைபெற்றது. சேலம் ஜவகர் திடலில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இதற்காக வரவழைக்கப்பட்டு தனித்தனியே பேருந்துகளின் ஒவ்வொரு பகுதியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆய்வில் தரம் குறைவாகவோ அரசு விதிமுறைகளின்படி வசதிகள் குறைவாக உள்ள பேருந்துகள் தகுதி நீக்கம் செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 91 தனியார் தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இன்று ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. வருகின்ற 30 ஆம் தேதி வரை பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்படுகிறது இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளின் 2 ஆயிரத்து 128 பேர் பள்ளிப் பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இதில்  தரம் குறைந்த பேருந்துகள் தகுதி நீக்கம் செய்யப்படும் என சேலம் கோட்டாட்சியர் செழியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறும்போது அரசு தெரிவித்துள்ள அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு உள்ளதா என்பது குறித்து கண்காணிக்க படுவதாகவும் விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.