ETV Bharat / state

சேலத்தில் இளம் பெண் கொலையா? - சேலத்தில் இளம் பெண் கொலையா?

சேலம்: அஸ்தம்பட்டியில் இளம்பெண் மாயமாகியுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

salem police in search of the missing women
author img

By

Published : Aug 29, 2019, 5:16 AM IST

Updated : Aug 29, 2019, 6:38 AM IST

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சந்திரன் கார்டன் பகுதியில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் என்பவர், ஜவுளி வியாபாரம், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், ரவி கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை ரவிகிருஷ்ணன் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது தமிழ்ச்செல்வி வீட்டில் இல்லை.

மேலும், குளியலறையில் ரத்தக்கறையுடன் சுவற்றில் 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்றும் விமல், ஹரி என்ற இருபெயர்களும் எழுதப்பட்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரவி, அக்கம் பக்கத்தினரிடமும் தனது தந்தைக்கும் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்த ஹரி கிருஷ்ணன், கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார்.

தகவலறிந்து உதவிகமிஷனர் ஆனந்தக்குமார் தலைமையில் வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் வீடு முழுவதும் ரத்தக்கறை இருந்ததால் தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டு அவரின் சடலத்தை அருகில் ஏங்கேனும் வீசியிருக்கலாம் என கருதி அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்குச் சென்று பார்த்தனர்.

ஆனால் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. பின்னர், ஹரிகிருஷ்ணனுக்கு விமல் என்ற நண்பர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகமடைந்த காவலர்துறையினர் ஹரிகிருஷ்ணன், விமல் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை குறித்து விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில் தனிப்படை அமைத்து உள்ளார் .

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சந்திரன் கார்டன் பகுதியில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் என்பவர், ஜவுளி வியாபாரம், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், ரவி கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை ரவிகிருஷ்ணன் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது தமிழ்ச்செல்வி வீட்டில் இல்லை.

மேலும், குளியலறையில் ரத்தக்கறையுடன் சுவற்றில் 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்றும் விமல், ஹரி என்ற இருபெயர்களும் எழுதப்பட்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரவி, அக்கம் பக்கத்தினரிடமும் தனது தந்தைக்கும் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்த ஹரி கிருஷ்ணன், கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார்.

தகவலறிந்து உதவிகமிஷனர் ஆனந்தக்குமார் தலைமையில் வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் வீடு முழுவதும் ரத்தக்கறை இருந்ததால் தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டு அவரின் சடலத்தை அருகில் ஏங்கேனும் வீசியிருக்கலாம் என கருதி அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்குச் சென்று பார்த்தனர்.

ஆனால் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. பின்னர், ஹரிகிருஷ்ணனுக்கு விமல் என்ற நண்பர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகமடைந்த காவலர்துறையினர் ஹரிகிருஷ்ணன், விமல் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை குறித்து விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில் தனிப்படை அமைத்து உள்ளார் .

Intro:சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்த பெண் மாயம்

கொலை செய்யப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என தனிப்படை போலீசார் விசாரணைBody:
சேலத்தில் இளம் பெண் திடீரென மாயமானார். வீட்டில் குளியல் அறையில் ரத்தக் கரை சிதறி இருந்ததால் பெண் கொலை செய்யப்பட்டாரா ?என விசாரணை நடக்கிறது.

இந்த பெண்ணை ஏரி குளங்களில் போலீசார் விடிய விடிய தேடினர்.

சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ளது சந்திரன் கார்டன் .

இந்த பகுதியில் வசித்து வந்தவர் ஹரி கிருஷ்ணன் .

40 வயதான ஹரிகிருஷ்ணன் ஜவுளி தொழிலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார் .

இவருக்கு தமிழ்ச்செல்வி (வயது 35)என்ற மனைவியும் ,
ரவி கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.

நேற்று மாலை 6 மணி அளவில் பள்ளியில் இருந்து சிறுவன்
ரவி கிருஷ்ணன் வீடு திரும்பினார். அப்போது வீடு திறந்து கிடந்தது.

பீரோவும் திறந்து கிடந்தது.

குளியலறையில் ரத்தக் கறை சிதறிக்கிடந்தது. சுவற்றில் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என எழுதப்பட்டு விமல் மற்றும் ஹரி என்ற இரண்டு பெயர்களும் எழுதப்பட்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவன் அக்கம்பக்கம் தெரிவித்தான்.பிறகு அவனது தந்தை ஹரி கிருஷ்ணனுக்கும் தெரிவித்தார் .

உடனே ஹரிகிருஷ்ணன் வீட்டுக்குவந்து பார்த்தார்.

பிறகு இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து உதவி கமிஷனர் ஆனந்தகுமார் உடனே சம்பவ இடம் வந்து விசாரித்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் ஜூலி அழைத்து வந்து மோப்பம் பிடிக்க விடப்பட்டது.

இது வீட்டிற்கு தமிழ்செல்வியின் வீட்டுக்கு அருகில் உள்ள மழைநீர் தேங்கி உள்ள குட்டை பகுதியில் சுற்றி சுற்றி வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த குட்டை பகுதியில் தேடினர் .

ஆனால் சடலம் ஏதும் கிடைக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர் அழைத்து வந்து தமிழ்ச்செல்வியின் வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர் .

தமிழ்ச் செல்வியின் கணவர் ஹரி கிருஷ்ணனை காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை செய்து வருகிறார்கள் .

வீடு முழுவதும் ரத்தக் கறை படிந்துள்ளதால் இளம்பெண் தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு எங்கும் வீச பட்டிருக்கலாமா?என கருதிய போலீசார் அஸ்தம்பட்டி, மற்றும் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் போலீசார் விடிய விடிய தேடினர் .

ஆனால் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.

பைனான்ஸ் செய்து வந்த ஹரி கிருஷ்ணனுக்கு வாலிபர் விமல் என்ற வாலிபர் இருந்து உள்ளார் .

இவரை சந்தேகிக்கும் போலீசார் தற்போது இவரிடமும் விசாரணை நடக்கிறது. தமிழ்ச்செல்வி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார் .இந்த செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது .
இது தவிர
சந்திரன் கார்டன் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலரையும் போலீசார் அழைத்து விசாரணை செய்து வருகிறார்கள். இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது கடத்தப்பட்டாரா என்று தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது .

இந்த சம்பவத்தை முழுவதும் விசாரித்து இளம் பெண் எங்கே என கண்டுபிடிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து உள்ளார் .
இதில் உள்ள துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள் .

இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .Conclusion:
Last Updated : Aug 29, 2019, 6:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.