ETV Bharat / state

சேலம் மத்திய சிறை கைதி திடீர் உயிரிழப்பு

சேலம்: கஞ்சா விற்பனை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

author img

By

Published : Feb 2, 2021, 8:46 PM IST

salem prisoner died
கைதி திடீர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த ஆட்டுக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மீரான் (56). இவர் கஞ்சா விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில், செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

முகமது மீரானுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, சிறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக முகமது மீரானை அரசு மருத்துவமனைக்கு சிறைத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக சேலம் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 80 ஆயிரம் திருட்டு !

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த ஆட்டுக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மீரான் (56). இவர் கஞ்சா விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில், செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

முகமது மீரானுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, சிறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக முகமது மீரானை அரசு மருத்துவமனைக்கு சிறைத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக சேலம் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 80 ஆயிரம் திருட்டு !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.