ETV Bharat / state

சட்டவிரோதமாக நெகிழி தயாரித்த ஆலைக்கு சீல்! ரூ.10 லட்சம் அபராதம் - பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

சேலம்: சிவதாபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை சட்டவிரோதமாக தயாரித்துவந்த ஆலைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்து ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர்.

plastic
author img

By

Published : Jul 24, 2019, 6:28 PM IST

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அரசின் உத்தரவை மீறி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நெகிழிப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாகவே உள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அலுவலர்கள் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில் சேலம் சிவதாபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை சட்டவிரோதமாக தயாரித்துவருவதாக சேலம் மாநகராட்சி அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையில் அலுவலர்கள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது தடைசெய்யப்பட்ட நெகிழிக் கேரி பைகள், கப்புகள் டன் கணக்கில் தயாரித்து குவித்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நெகிழிப் பொருள்களை தயாரித்த ஆலைக்கு சீல்
இதனையடுத்து, தடையை மீறி தயாரித்த 26 டன் நெகிழிப் பொருட்களை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து, குடோனுக்கு சீல் வைத்து, மேலும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அரசின் உத்தரவை மீறி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நெகிழிப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாகவே உள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அலுவலர்கள் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில் சேலம் சிவதாபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை சட்டவிரோதமாக தயாரித்துவருவதாக சேலம் மாநகராட்சி அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையில் அலுவலர்கள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது தடைசெய்யப்பட்ட நெகிழிக் கேரி பைகள், கப்புகள் டன் கணக்கில் தயாரித்து குவித்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நெகிழிப் பொருள்களை தயாரித்த ஆலைக்கு சீல்
இதனையடுத்து, தடையை மீறி தயாரித்த 26 டன் நெகிழிப் பொருட்களை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து, குடோனுக்கு சீல் வைத்து, மேலும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
Intro:சேலம் அருகே சிவதாபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சட்டவிரோதமாக தயாரித்து வந்த ஆலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 26 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.


Body:தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்று பொருள்களை பயன்படுத்துமாறு தமிழக அரசு சார்பில் பொது மக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கும் அறிவுறுத்தி இருந்தனர்.

இருப்பினும் தமிழக அரசின் உத்தரவை மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் சிவதாபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சட்டவிரோதமாக தயாரித்து வருவதாக சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் டன் கணக்கில் தயாரித்து குவித்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து தடையை மீறி தயாரித்த 26 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் மேலும் தமிழக அரசின் தடையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து குடோனுக்குள் செய்தனர். மேலும் தமிழக அரசின் தடையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.

சேலம் அருகே குடியிருப்புக்கள் மிகுந்த பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் டன் கணக்கில் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.