சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
![on ganesh chaturthi salem collector raman asked people to offer prayings in their homes](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/collector-and-police-meeting-2_1808newsroom_1597771137_552.jpg)
![on ganesh chaturthi salem collector raman asked people to offer prayings in their homes](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-01-collector-meeting-pic-7204525_18082020211905_1808f_1597765745_184.jpg)
பண்டிகை கொண்டாட தேவையான பொருள்களை வாங்க கடைகளுக்கோ சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் தகுந்த இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது" என்றார்.
கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் த. செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. திவாகர், மேட்டூர் சார் ஆட்சியர் வெ. சரவணன், துணை ஆணையர் எம். சந்திரசேகரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் என். நடராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் (சேலம்) மாறன், (ஆத்தூர்) எம். துரை, (சங்ககிரி) அமிர்தலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) என். தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: அனுமதி கோரி களமிறங்கிய தனி ஒருவன்!