ETV Bharat / state

25 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

author img

By

Published : Nov 23, 2019, 10:08 PM IST

சேலம்: அரசுப் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து ஆண்டிற்கு சுமார் 25 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் படிப்பிற்கான பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

minister sengottaiyan

சேலம் மாவட்டம், கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான பட்டயக் கணக்காளர் படிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், மக்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செ.செம்மலை ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசுப் பள்ளிகளில் பட்டயக் கணக்காளர் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

அரசுப் பள்ளியில் கணக்காளர் பயிற்சி தொடக்கம்
அரசுப் பள்ளியில் கணக்காளர் பயிற்சி தொடக்கம்
இன்றைய சூழ்நிலையில் இந்திய அளவில் சுமார் 10 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், 2 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஆண்டிற்கு சுமார் 10,000 பேர் பட்டயக் கணக்காளர் படிப்பை நிறைவு செய்யும் வகையில் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

2019ஆம் ஆண்டு மட்டும் சுமார் 25 ஆயிரம் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும் 70 பயிற்சி மையங்களில் நமது பயிற்சி குழுவை சேர்ந்த 500க்கு மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளிப்பார்கள்.

இதேபோன்று வருகின்ற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் காலணிகளுக்கு பதிலாக ஷுக்கள் வழங்கப்படவுள்ளது.

மாணவர்களுக்கு கணக்காளர் பயிற்சி தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான கல்வியினை வழங்கும் வகையில் 92,000 ஸ்மார்ட் போர்டுகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும். இந்தியாவின் எதிர்காலம் மாணவ மாணவியர்களாகிய உங்களின் கைகளில்தான் உள்ளது. அதனை உணர்ந்து அனைவரும் நல்ல முறையில் கல்வி பயின்று தங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

சேலம் மாவட்டம், கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான பட்டயக் கணக்காளர் படிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், மக்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செ.செம்மலை ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசுப் பள்ளிகளில் பட்டயக் கணக்காளர் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

அரசுப் பள்ளியில் கணக்காளர் பயிற்சி தொடக்கம்
அரசுப் பள்ளியில் கணக்காளர் பயிற்சி தொடக்கம்
இன்றைய சூழ்நிலையில் இந்திய அளவில் சுமார் 10 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், 2 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஆண்டிற்கு சுமார் 10,000 பேர் பட்டயக் கணக்காளர் படிப்பை நிறைவு செய்யும் வகையில் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

2019ஆம் ஆண்டு மட்டும் சுமார் 25 ஆயிரம் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும் 70 பயிற்சி மையங்களில் நமது பயிற்சி குழுவை சேர்ந்த 500க்கு மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளிப்பார்கள்.

இதேபோன்று வருகின்ற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் காலணிகளுக்கு பதிலாக ஷுக்கள் வழங்கப்படவுள்ளது.

மாணவர்களுக்கு கணக்காளர் பயிற்சி தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான கல்வியினை வழங்கும் வகையில் 92,000 ஸ்மார்ட் போர்டுகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும். இந்தியாவின் எதிர்காலம் மாணவ மாணவியர்களாகிய உங்களின் கைகளில்தான் உள்ளது. அதனை உணர்ந்து அனைவரும் நல்ல முறையில் கல்வி பயின்று தங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

Intro:

சேலம் மாவட்டம், கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான பட்டயக் கணக்காளர் படிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாண்புமிகு பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் .கே.ஏ.செங்கோட்டையன் இன்று துவக்கி வைத்தார்.Body:

இவ்விழா மாவட்ட ஆட்சியர் சி .அ.ராமன், தலைமையிலும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செ.செம்மலை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.


இவ்விழாவில் மாண்புமிகு பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது :
         மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் ஆணையின் படி இன்றைய தினம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான பட்டயக் கணக்காளர் படிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது மாநிலத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பட்டயக் கணக்காளர் படிப்பு குறித்த விழிப்புணர்வினை பெற்று அதற்காக பயிற்சியினை பெறும் பொழுது அவர்கள் இந்திய அளவில் அவர்களுக்கான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
         இன்றைய சூழ்நிலையில் இந்திய அளவில் சுமார் 10 இலட்சம் பட்டயக் கணக்காளர் தேவை உள்ளது. ஆனால் நமது இந்தியா திருநாட்டில் 2 இலட்சம் பட்டயக் கணக்காளர் கள் மட்டுமே உள்ளனர். எதிர்காலத்தில் மாணவ, மாணவியர்கள் இந்த பட்டயக் கணக்காளர் படிப்பினை முடிக்கும் பொழுது அவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி ஆண்டிற்கு சுமார் 10,000 பேரை பட்டயக் கணக்காளர் படிப்பை நிறைவு செய்யும் வகையில் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 25,000 மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியானது ஒவ்வொரு மாவட்ட அளவிலும் 70 பயிற்சி மையங்களில் நமது பயிற்சி குழுவை சேர்ந்த சுமார் 500 மேற்பட்ட பட்டயக் கணக்காளர் கள் வழங்க உள்ளார்கள். பயிற்சி அளிக்ககூடிய ஆசிரியர்கள் அனைவரும் பட்டயக் கணக்காளர் படிப்பினை நிறைவு செய்து சிறந்த முறையில் பணியாற்றி வருபவர்கள். உங்களுக்கு இப்பயிற்சியினை இலவசமாக வழங்கவுள்ளனர். இத்தேர்வு குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கம் அளிப்பார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அரசு மற்றும் அரசு பயன் பெரும் பள்ளிகளில் பட்டயக் கணக்காளர் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகின்றது. 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் இப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
வருகின்ற ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் காலணிகளுக்கு பதிலாக ஷுக்கள் (ளுhடிந) வழங்கப்படவுள்ளது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தை விட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிர்களின் கல்வி தரம் உயர மாண்புமிகு அம்மாவின் ஆசிபெற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான கல்வியினை வழங்கும் வகையில் 92,000 ஸ்மார்ட் போர்டுகள் வரும் டிசம்பர் மாததிற்குள் வழங்கப்படும். மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் உங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசின் திட்டங்களை பயன்படுத்தில் உங்கள் வாழ்வை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இந்தியா நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மடிகணினி வழங்கும் ஒரே அரசு மாண்புமிகு அம்மாவின் அரசு.
தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் தரத்தினை மிஞ்சும் வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 4 விதமான வண்ண சீறுடைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பொது தேர்வு முடிவுகளை உடனுகுடன் கைபேசிக்கு குறுதகவல் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் எதிர்காலம் மாணவ, மாணவியர்களாகிய உங்களின் கைகளில் தான் உள்ளது. அதனை உணர்ந்து அனைத்து மாணவ, மாணவியர்களும் நல்ல முறையில் கல்வி பயின்று தங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட வேண்டும். இவ்வாறு மாண்புமிகு பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் .கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.



Conclusion:இந்நிகழ்ச்சியில் வருமான வரித்துறை உதவி ஆணையர் வீ.நத்தகுமார், மேட்டூர் சார் ஆட்சியர் ஜி.சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷ் மூர்த்தி, தென்னிந்திய பட்டயக் கணக்காளர் நிறுவன செயலாளர் கு.ஜலபதி, டெல்டா ஸ்குவார்டு கமாண்டர் சு.ஈசன், பட்டயக் கணக்காளர் சுபாஷினி கணபதி, நிர்மலா மேல்நிலைப் பள்ளி தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் அருட்சகோ.ஆ.டேவிட் செல்வராஜ் உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் தொடர்புடய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.