ETV Bharat / state

100 அடியை தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: பருவமழை காலத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக  100 அடி நீர்மட்டத்தை மேட்டூர் அணை எட்டியுள்ளது.

author img

By

Published : Sep 26, 2020, 12:41 PM IST

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பியது. இதனையடுத்து அந்த அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

அந்த தண்ணீர் தமிழ்நாடு-கர்நாடக எல்லை பகுதிகள் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் கடந்த 21ஆம் தேதி முதல் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக தினமும் அதிகரித்து வந்தது. நீர்வரத்தின் காரணமாக அணையின் நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்துகொண்டே இருந்தது. கடந்த 21ஆம் தேதி 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் அதிகரித்து , நேற்று(செப் 25) காலை 99.62 அடியாக இருந்தது.

பின்னர் அணையின் நீர்மட்டம் மதியம் சுமார் 12.30 மணி அளவில் 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையின் 16 கண் மதகுகள் அருகே காவிரி அன்னைக்கு, விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.

இந்த ஆண்டில் தற்போதுதான் முதல் முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இந்த நீர்மட்டம் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி வரை 100 அடியாகவே நீடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று(செப் 26) காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.020 அடியாகவும், நீர் இருப்பு 64866 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 27077 கன அடியாகவும் உள்ளது காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக 20,000 கன அடி நீரும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 850 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணைப் பகுதிகளில் நேற்று இரவு 2.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. காவிரி டெல்டா, கால்வாய் பாசனத்துக்கு தினமும் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்தது. தற்போது மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'என்னை தூக்கிவிட்டவர் அவர்' - எஸ்.பி.பி குறித்து சதுரங்க வீரர் விஸ்வநாதன் உருக்கம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பியது. இதனையடுத்து அந்த அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

அந்த தண்ணீர் தமிழ்நாடு-கர்நாடக எல்லை பகுதிகள் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் கடந்த 21ஆம் தேதி முதல் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக தினமும் அதிகரித்து வந்தது. நீர்வரத்தின் காரணமாக அணையின் நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்துகொண்டே இருந்தது. கடந்த 21ஆம் தேதி 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் அதிகரித்து , நேற்று(செப் 25) காலை 99.62 அடியாக இருந்தது.

பின்னர் அணையின் நீர்மட்டம் மதியம் சுமார் 12.30 மணி அளவில் 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையின் 16 கண் மதகுகள் அருகே காவிரி அன்னைக்கு, விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.

இந்த ஆண்டில் தற்போதுதான் முதல் முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இந்த நீர்மட்டம் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி வரை 100 அடியாகவே நீடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று(செப் 26) காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.020 அடியாகவும், நீர் இருப்பு 64866 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 27077 கன அடியாகவும் உள்ளது காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக 20,000 கன அடி நீரும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 850 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணைப் பகுதிகளில் நேற்று இரவு 2.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. காவிரி டெல்டா, கால்வாய் பாசனத்துக்கு தினமும் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்தது. தற்போது மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'என்னை தூக்கிவிட்டவர் அவர்' - எஸ்.பி.பி குறித்து சதுரங்க வீரர் விஸ்வநாதன் உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.