ETV Bharat / state

ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் செல்லத் தடை - இன்று முதல் சேலத்தில் அமல்! - Motorists banned from wearing helmets

சேலம்: இரண்டு முக்கியச் சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அந்த விதி சேலத்தில் அமலுக்கு வருகிறது.

helmet take diversion
helmet take diversion
author img

By

Published : Dec 16, 2019, 12:35 PM IST

தமிழ்நாட்டில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. வாகன விபத்தினால் ஏற்படும் இழப்பைத் தடுக்க ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே முக்கிய நகரங்களில் காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் வாகனச் சோதனைகள் நடத்தி ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வாட் ஸ்பாட் பைன் விதிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் தனியார் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சேலம் மாநகரம், மாவட்டப் பகுதிகளில் குறிப்பிட்ட சாலைகளில் தேர்வு செய்து அந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டும் நபர்களை அனுமதிக்காமல் போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவுரை கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் சேலம் மாநகரில் இரண்டு முக்கியச் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், அவ்வாறு அணியவில்லை என்றால் அப்பகுதி சாலையில் பயணிக்க முடியாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு முக்கியச் சாலைகளில் செல்லும் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்குத் தடை

மேலும், சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள காவல்துறை கமிஷனர் அலுவலகம் பகுதியில் இருந்து திருச்சிக்குச் செல்லும் பெரியார் வளைவுப் பகுதியும், சேலம் சுந்தர் லாட்ஜ் சாலையிலும் என இரண்டு சாலைகளில் ஹெல்மெட் கண்டிப்பாக அணியும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் இந்த இரண்டு பகுதிகளிலும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை போக்குவரத்துத்துறையினர் அனுமதிப்பதில்லை, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபரைப் பிடித்து காவல் துறையினர் அறிவுரை கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க:

சேலத்தில் வருமானவரித் துறை சோதனை

தமிழ்நாட்டில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. வாகன விபத்தினால் ஏற்படும் இழப்பைத் தடுக்க ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே முக்கிய நகரங்களில் காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் வாகனச் சோதனைகள் நடத்தி ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வாட் ஸ்பாட் பைன் விதிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் தனியார் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சேலம் மாநகரம், மாவட்டப் பகுதிகளில் குறிப்பிட்ட சாலைகளில் தேர்வு செய்து அந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டும் நபர்களை அனுமதிக்காமல் போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவுரை கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் சேலம் மாநகரில் இரண்டு முக்கியச் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், அவ்வாறு அணியவில்லை என்றால் அப்பகுதி சாலையில் பயணிக்க முடியாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு முக்கியச் சாலைகளில் செல்லும் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்குத் தடை

மேலும், சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள காவல்துறை கமிஷனர் அலுவலகம் பகுதியில் இருந்து திருச்சிக்குச் செல்லும் பெரியார் வளைவுப் பகுதியும், சேலம் சுந்தர் லாட்ஜ் சாலையிலும் என இரண்டு சாலைகளில் ஹெல்மெட் கண்டிப்பாக அணியும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் இந்த இரண்டு பகுதிகளிலும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை போக்குவரத்துத்துறையினர் அனுமதிப்பதில்லை, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபரைப் பிடித்து காவல் துறையினர் அறிவுரை கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க:

சேலத்தில் வருமானவரித் துறை சோதனை

Intro:சேலத்தில் இரண்டு முக்கிய சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இன்று முதல் அமலுக்கு வருகிறது.


Body:தமிழகத்தில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது வாகன விபத்தினால் ஏற்படும் இழப்பை தடுக்க ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே முக்கிய நகரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வாட் ஸ்பாட் பைன் விதிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் தனியார் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சாலைகளில் தேர்வு செய்து அந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டும் நபர்கள் அனுமதிக்காமல் போக்குவரத்து போலீசார் அறிவுரை கூறி வருகிறார்கள். அந்தவகையில் சேலம் மாநகரில் இரண்டு முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்லும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் அவ்வாறு அணியவில்லை என்றால் அப்பகுதி சாலையில் பயணிக்க முடியாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு முக்கிய சாலைகளில் செல்லும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் பகுதியில் இருந்து திருச்சிக்கு செல்லும் பெரியார் வளைவு பகுதியும், சேலம் சுந்தர் லாட்ஜ் சாலை ஆகிய இரண்டு சாலைகளில் ஹெல்மெட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் இந்த இரண்டு பகுதிகளிலும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து அனுமதிப்பதில்லை, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபரை பிடித்து அவர்களை போலீசார் அறிவுரை கூறுவோம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.