ETV Bharat / state

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயி தற்கொலை முயற்சி

author img

By

Published : Jan 23, 2020, 3:53 PM IST

சேலம்: எடப்பாடி அருகே உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

farmer suicide attempt to  protest against power grid company
farmer suicide attempt to protest against power grid company

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தியம்பட்டியில் ஆனந்தன் என்ற விவசாயிக்குச் சொந்தமான இடத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல்துறையினர், விவசாயி ஆனந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறங்கி வந்தார்.

இதுகுறித்து விவசாயி கூறுகையில், தனது விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதால், தன்னுடைய நிலத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவில்லை. உரிய இழப்பீடு வழங்கி தனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டுமே தனது நிலத்தை உயர் மின் கோபுரம் அமைக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.

விவசாயி தற்கொலை முயற்சி

இதையடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், இழப்பீடு பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.

இதையும் படிங்க: சிறுமியினை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்கச் சொல்லி போராடிய மக்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தியம்பட்டியில் ஆனந்தன் என்ற விவசாயிக்குச் சொந்தமான இடத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல்துறையினர், விவசாயி ஆனந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறங்கி வந்தார்.

இதுகுறித்து விவசாயி கூறுகையில், தனது விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதால், தன்னுடைய நிலத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவில்லை. உரிய இழப்பீடு வழங்கி தனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டுமே தனது நிலத்தை உயர் மின் கோபுரம் அமைக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.

விவசாயி தற்கொலை முயற்சி

இதையடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், இழப்பீடு பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.

இதையும் படிங்க: சிறுமியினை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்கச் சொல்லி போராடிய மக்கள்

Intro:

உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின் கோபுரம் மீது ஏறி விவசாயி தற்கொலை முயற்சி Body:

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பெரிய முத்தியம்பட்டி பகுதியில், ஆனந்தன் என்ற விவசாயிக்கு சொந்தமான இடத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனது இடத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து
விவசாயி ஆனந்தன் உயர்மின் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார் .

அப்போது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து விவசாயி தற்கொலை முயற்சியை கை விட்டு கீழே இறங்கி வந்தார் .

தற்கொலை போராட்டம் குறித்து விவசாயி கூறுகையில், ' என் விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் .

உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதால், என்னுடைய நிலத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவில்லை.

உரிய இழப்பீடு வழங்கி எனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டுமே எனது நிலத்தை உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு நிலத்தை தருவேன் ' என்று தெரிவித்தார்.

இதனையடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் இழப்பீடு பெற்று தர ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

Conclusion:உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
விவசாயி, மின் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.