ETV Bharat / state

ஓமலூர் அருகே ராட்சத குழாயில் உடைப்பு: வெள்ளம்போல் பாய்ந்தோடிய நீர்!

சேலம்: ஓமலூர் அருகே குடிநீர் எடுத்து செல்லப்படும் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.

author img

By

Published : Sep 11, 2019, 3:04 PM IST

waste water

சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து காடையாம்பட்டி, ஓமலூர் பகுதிகளுக்கு காவிரிநீர் கொண்டு வருவதற்காக ராட்சதக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மேட்டூர் அனல்மின் நிலையம் எதிரே பவானி செல்லும் சாலையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

சாலையில் வீணாகும் குடிநீர்

இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. வெளியான தண்ணீர் சிறிது நேத்தில் சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில், பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு நீருந்து நிலைய மின் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து காடையாம்பட்டி, ஓமலூர் பகுதிகளுக்கு காவிரிநீர் கொண்டு வருவதற்காக ராட்சதக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மேட்டூர் அனல்மின் நிலையம் எதிரே பவானி செல்லும் சாலையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

சாலையில் வீணாகும் குடிநீர்

இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. வெளியான தண்ணீர் சிறிது நேத்தில் சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில், பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு நீருந்து நிலைய மின் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

Intro:சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குடிநீர் எடுத்து செல்லப்படும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு  லட்சக்கணக்கான லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Body:

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டார கிராம பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்ல திட்டமிட்டு  காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

இதனையடுத்து ராட்சத குழாய்கள் மூலம் மேட்டூர் தொட்டில்பட்டியிலிருந்து காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

அவ்வப்போது,
பராமரிப்பு பணியில் ஏற்படும் குளறுபடி காரணமாக பல இடங்களில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவது தொடர்கதையாக உள்ளது.

.மேட்டூர் - பவானி சாலையில் மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே கடந்த ஓராண்டுக்கு மேலாக குடிநீர் குழாயில் தண்ணீர் கசிந்து வெளியேறி வந்தது.

அப்பகுதியில் கடை வைத்திருப்போர் இந்த தண்ணீரை தங்களின் கடைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திற்கு மிக அருகில் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்தனர்.

இரு வாரங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீர் வீணானது.

இன்று திடீரென இந்த ராட்சத குழாயில் பெரிய அளவிலான உடைப்பு ஏற்பட்டது. ஒரு பனை மரம் அளவு உயரத்திற்கு தண்ணீர் பீச்சியடித்தது.

சாலையில்வாகனங்களில் செல்வோர் மீதும் தண்ணீர் தெறித்தது.

வெளியான தண்ணீர் சிறிது நேத்தில் சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு குளம் போல் தேங்கியது.

பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 30 நிமிட நேரத்திற்கு பிறகு நீருந்துநிலைய மின்மோட்டார்கள் நிறுத்தப்பட்டன.

அதன் பிறகும் சுமார் ஒரு மணிநேரத்திற்கு ராட்சத குழாயிலிருந்த தண்ணீர் வெளியேறி வந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் அவர்கள் நேரில் வந்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யாமல் காலம் தாழ்த்தி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Conclusion:குடிநீர் வீணானதற்கு குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.