ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுர விநியோகம் - துண்டு பிரசுர விநியோகம்

சேலம்: ஓமலூர் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுர விநியோகம், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

dmk starts signature campaign in omalu
dmk starts signature campaign in omalu
author img

By

Published : Feb 3, 2020, 7:53 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள், சாலை மறியல்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களைத் திரும்ப பெறவேண்டும் என்று பதிவிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

துண்டு பிரசுர விநியோகம்

இதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: ‘சிஏஏ சல்லடைப் போன்றது’ - கனிமொழி எம்பி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள், சாலை மறியல்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களைத் திரும்ப பெறவேண்டும் என்று பதிவிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

துண்டு பிரசுர விநியோகம்

இதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: ‘சிஏஏ சல்லடைப் போன்றது’ - கனிமொழி எம்பி

Intro:சேலம் மாவட்டம், ஓமலூர் பஸ்நிலையத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுர விநியோகம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.Body:
இந்தியா முழுவதும் மத்தியஅரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள், சாலை மறியல்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று ஓமலூர் பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை முன்பாக குடியுரிமைத் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் குடியுரிமைத் திருத்த சட்டம் 2019, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்ட திருத்தங்களை திரும்ப பெறவேண்டும் என்று பதிவிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய, கிருஸ்துவ மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டு சென்றனர்.
Conclusion:திமுக ஓமலூர் பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போத்தன், வீரபாண்டியார் நற்பணி மன்ற தலைவர் மகேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் அரியாக்கவுண்டர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மநேமக அப்துல்அக்கீம், ஜாககான், ரபுதீன்பாஷா திராவிட கழக ஒன்றிய தலைவர் பெ சௌந்தரராஜன், உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.