ETV Bharat / state

சேலத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி! - சேலத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

சேலம்: தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு ஓமலூர், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் தீயணைப்புத் துறையினர் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

சேலத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
author img

By

Published : Oct 14, 2019, 12:16 PM IST

தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் வட்டாட்சியர்கள் தலைமையில் போலி ஒத்திகை நிகழ்ச்சியும் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

இதில் முன்னதாக ஓமலூர் தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்கள் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து போலி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

தொடர்ந்து தீ விபத்து, வெள்ளம், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றுவது குறித்து பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனையடுத்து ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் பலரும் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

இதையும் படியுங்க:

அரியலூரில் சர்வதேச 'இயற்கைப் பேரிடர் குறைப்பு தினம்'

தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் வட்டாட்சியர்கள் தலைமையில் போலி ஒத்திகை நிகழ்ச்சியும் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

இதில் முன்னதாக ஓமலூர் தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்கள் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து போலி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

தொடர்ந்து தீ விபத்து, வெள்ளம், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றுவது குறித்து பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனையடுத்து ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் பலரும் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

இதையும் படியுங்க:

அரியலூரில் சர்வதேச 'இயற்கைப் பேரிடர் குறைப்பு தினம்'

Intro:தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.Body:

சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு போலி ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி வட்டாச்சியர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னதாக இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில்லிருந்து பொதுமக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது, அதில் பாதிக்கப்பட்டால் எவ்வாறு தப்பிப்பது குறித்து ஓமலூர் தீயணைப்புத்துறை சார்பில் போலி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தொடர்ந்து, தீவிபத்து, வெள்ளம் மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனையடுத்து ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த தேசிய பேரிடர் குறைப்பு தின பேரணியில் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்க மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

Conclusion:
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் குமரன்,மகேஸ்வரி, தீயணைப்புப் வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.