சேலம் மாவட்ட காவல்துறை, ஸ்பார்க்கின் ஈவன்ட்ஸ் சார்பாக கிரிக்கெட் போட்டி லைன்மேடு, அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 64 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது. இப்போட்டியில், வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.7 ஆயிரத்து 500, நான்காவது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்படும் நபருக்கு ஆயிரம் ரூபாயும், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்படும் நபருக்கு 3 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: வீட்டில் குழி தோண்டி பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது!