ETV Bharat / state

தேசிய கல்விக் கொள்கையை கண்டித்து கையெழுத்து இயக்கம்

author img

By

Published : Jul 28, 2019, 1:05 PM IST

Updated : Jul 29, 2019, 8:51 AM IST

சேலம்: தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேலம் சந்திப்பு, சூரமங்கலம் உழவர் சந்தைப் பகுதியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

CPM

மத்திய பாஜக அரசு 2019ஆம் ஆண்டுக்கான தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை தனியாருக்கு லாபம் ஈட்டும் வகையில் அரசு தயாரித்துள்ளதாகவும், தாய்மொழி வழிக் கல்விக்கு உத்தரவாதம் அளிக்காமல் இந்தியை திணிக்கும் விதமான கொள்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

சமூகநீதிக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீட்டை சீரழித்து தொழில் கல்வி என்ற பெயரில் குலக்கல்வி முறையை மீண்டும் அமல்படுத்த வழிவகை செய்கிறது. மாநில உரிமைகளிலிருந்து கல்வி பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கையெழுத்து இயக்கம்

எனவே இந்த தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜூலை 25 முதல் 31 வரை மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அதை மத்திய அரசுக்கு அனுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி இன்று சேலம் சந்திப்பு, சூரமங்கலம் உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் சேலம் மாநகர மேற்கு செயலாளர் எம். கனகராஜ் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அப்போது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதை மாநிலக் குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் தொடங்கிவைத்தார். செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. பாலகிருஷ்ணன் ஐ. ஞானசவுந்தரி, ஜி. கண்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மத்திய பாஜக அரசு 2019ஆம் ஆண்டுக்கான தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை தனியாருக்கு லாபம் ஈட்டும் வகையில் அரசு தயாரித்துள்ளதாகவும், தாய்மொழி வழிக் கல்விக்கு உத்தரவாதம் அளிக்காமல் இந்தியை திணிக்கும் விதமான கொள்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

சமூகநீதிக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீட்டை சீரழித்து தொழில் கல்வி என்ற பெயரில் குலக்கல்வி முறையை மீண்டும் அமல்படுத்த வழிவகை செய்கிறது. மாநில உரிமைகளிலிருந்து கல்வி பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கையெழுத்து இயக்கம்

எனவே இந்த தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜூலை 25 முதல் 31 வரை மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அதை மத்திய அரசுக்கு அனுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி இன்று சேலம் சந்திப்பு, சூரமங்கலம் உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் சேலம் மாநகர மேற்கு செயலாளர் எம். கனகராஜ் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அப்போது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதை மாநிலக் குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் தொடங்கிவைத்தார். செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. பாலகிருஷ்ணன் ஐ. ஞானசவுந்தரி, ஜி. கண்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Intro:மாணவர்களின் எதிர்காலத்தை பாலாக்கும் , மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கண்டித்து சிபிஎம் கட்சி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
Body:

மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் தேசிய கல்வி கொள்கை 2019யை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேலம் ஜங்ஷன் சூரமங்கலம் உழவர் சந்தை பகுதியில் மாபெரும் பையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏழை எளிய நடுத்தர மக்களின் கல்வி உரிமையை முடக்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கை 2019 யை அமல்படுத்த வரைவு அறிக்கையை பொதுமக்கள் கருத்து கேட்புக்கு எனஅறிவித்து வெளியிட்டுள்ளது. அரசு மக்களுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து விடுவித்து கொண்டு கல்வியை முழுக்க முழுக்க தனியாருக்கு லாபம் ஈட்டும் வகையில் செயல்பட முடிவெடுத்துள்ளது. தாய்மொழிவழிக் கல்வி கற்பதற்கான உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்தித் திணிப்பு முயற்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது பள்ளிக் கல்வியில் 3 5 8ம் வகுப்புகளில் புதிய தேர்வு முறையை புகுத்துகிறது.

சமூகநீதிக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீட்டை சீரழித்து தொழில் கல்வி என்ற பெயரில் குலக்கல்வி முறையை மீண்டும் அமல்படுத்த வழிவகை செய்கிறது. உயர்கல்வியில் அந்நிய பல்கலைக் கழகங்களை அனுமதிக்க உள்ளது.
கல்வியில் மாநில உரிமைகளில் இருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. எனவே மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை 2019 திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூலை 25 முதல் 31 வரை மக்களிடம் கையெழுத்து நடந்து மத்தியஅரசுக்கு அனுப்ப கையெழுத்து இயக்கம் மாநகர மேற்கு செயலாளர் எம்,கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.

Conclusion:
இதில் மாநில குழு உறுப்பினர் டி, ரவீந்திரன் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் ஆர், வெங்கடபதி மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.பாலகிருஷ்ணன் ஐ,ஞானசவுந்தரி, ஜி, கண்ணன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Last Updated : Jul 29, 2019, 8:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.