சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சார்ந்தவர் பத்மராஜன். இவர் டயர் ரீடிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற ஒரு தீராத ஆசை காரணமாக நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் வரை இவர் பல தேர்தல்களில் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
![election king padmarajan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2690720_padmarajan.jpg)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் 199வது முறையாக பத்மராஜன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மேட்டூர் சட்டமன்ற தொகுதி தருமபுரி நாடாளுமன்ற தொகுதியோடு இணைந்துள்ளதால் பத்மராஜன் தருமபுரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் 200 ஆவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்கிறார்.