ETV Bharat / state

சேலத்தில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குளம் புனரமைப்பு - 18th-century pond, reconstruction, Salem, asthampatti

சேலம் : அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தெப்பக்குளத்தில் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது.

18th-century, pond
author img

By

Published : Sep 8, 2019, 12:10 PM IST

பதினெட்டாம் நூற்றாண்டில் பெரிய ராஜா, சின்ன ராஜா ஆகிய சிற்றரசர்களால் தெப்பக்குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள இக்குளம் தற்போது அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர்மேலாண்மை திட்டத்தின் கீழ் நீராதாரம் காத்தல், பாரம்பரிய நீர்நிலைகளைப் புதுப்பித்தல், ஆழ்துளை கிணறுகள் மறுபயன்பாடு, தீவிர மரம் வளர்ப்பு போன்ற திட்டங்களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது..

சேலத்தில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குளம் புனரமைப்பு

இதனிடையே, இக்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை நேற்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஸ் தொடங்கிவைத்தார். மேலும் இது குறித்து அவர், இக்குளம் பாரம்பரியமிக்க குளமாகும். இக்குளம் தூர்வாரி மறுசீரமைப்பு செய்யப்பட்டு பருவமழை காலங்களில் நீரை சேமிக்க ஏதுவாக மாற்றப்பட உள்ளது எனக் கூறினார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பெரிய ராஜா, சின்ன ராஜா ஆகிய சிற்றரசர்களால் தெப்பக்குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள இக்குளம் தற்போது அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர்மேலாண்மை திட்டத்தின் கீழ் நீராதாரம் காத்தல், பாரம்பரிய நீர்நிலைகளைப் புதுப்பித்தல், ஆழ்துளை கிணறுகள் மறுபயன்பாடு, தீவிர மரம் வளர்ப்பு போன்ற திட்டங்களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது..

சேலத்தில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குளம் புனரமைப்பு

இதனிடையே, இக்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை நேற்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஸ் தொடங்கிவைத்தார். மேலும் இது குறித்து அவர், இக்குளம் பாரம்பரியமிக்க குளமாகும். இக்குளம் தூர்வாரி மறுசீரமைப்பு செய்யப்பட்டு பருவமழை காலங்களில் நீரை சேமிக்க ஏதுவாக மாற்றப்பட உள்ளது எனக் கூறினார்.

Intro:நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 05ல் கோரிமேடு ஆத்துக்காடு பகுதியில் உள்ள அருள்மிகு சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தெப்பக்குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது.


Body:சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நீர் ஆதாரம் காத்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு, பராமரிப்பை நீர் ஆதாரங்கள், ஏரிகளை புதுப்பித்தல், நீர் நிலை மேம்பாடு, மறு பயன்பாடு ஆழ்துளை கிணறு மிள்நிரப்புதல், தீவிர மரம் வளர்ப்பு ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் பாரம்பரிய நீர் ஆதாரங்கள் ஏரிகளை புதுப்பிக்கும் பணிகளின் கீழ் பதினெட்டாம் நூற்றாண்டில் பெரிய ராஜா மற்றும் சின்ன ராஜா என்ற சகோதரர் களால் கட்டப்பட்ட குளம் குளம், தற்பொழுது அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 05ல் கோரிமேடு ஆத்துக்காடு பகுதியில் உள்ளது.

ராஜா ராணி தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் இந்த தெப்பக்குளம் அருள்மிகு சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக உள்ளது. இந்தக் குலத்தில் கற்களினால் செதுக்கப்பட்ட படிக்கட்டு அமைப்புக்கள் தாரமங்கலம் கோவிலின் சிற்பக் கலைக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. இந்தப் பாரம்பரியம் மிக்க ராஜா ராணி தெப்பக்குளத்தின் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் மறுசீரமைப்பு, பருவமழை காலங்களில் இக்குளத்தில் மழைநீர் சேகரிக்கும் வகையில் புனரமைப்பு பணிகளை இன்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் துவக்கி வைத்தார்.

மேலும் குலத்திற்கான நீர்வரத்து பாதைகள் கண்டறியப்பட்டு பாதைகளில் உள்ள முட்புதர்கள் முற்றிலுமாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பேட்டி: சதீஷ், மாநகராட்சி ஆணையாளர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.