ETV Bharat / state

காவல் துறையினரை தாக்கிய நபர்கள் - சிசிடிவி காட்சி! - stranger attack police on ramanathapuram

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

சிசிடிவி
சிசிடிவி
author img

By

Published : Jan 11, 2020, 7:35 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இரவு நேரத்தில் ரோந்து பணியில் சார்பு ஆய்வாளர்கள் நந்தகுமார், ஜெயபாண்டியன் இருந்துள்ளனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், திடீரென்று ஆய்வாளர்களை நோக்கி ஓடி வந்த அடையாளம் தெரியாத நபர், கட்டையால் தாக்க முயன்றார். இதனையடுத்து காவல் துறையினர் ஏற்கனவே விசாரித்துக்கொண்டிருந்த இரண்டு நபர்களும் இந்த சூழலை பயன்படுத்தி ஆய்வாளர்களை சரமாரியாக தாக்கினர்.

ரோந்து பணியிலிருந்த சார்பு ஆய்வாளர்களை பலமாக தாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள்

இதையடுத்து, பலத்த காயம் அடைந்த ஆய்வாளர்கள் மருத்துவச் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து எஸ்.பி. கூறுகையில், "தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகிறோம்" என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வாக்குப் பெட்டியுடன் ஓட முயன்ற அதிமுக வேட்பாளர் - சிசிடிவி காட்சி!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இரவு நேரத்தில் ரோந்து பணியில் சார்பு ஆய்வாளர்கள் நந்தகுமார், ஜெயபாண்டியன் இருந்துள்ளனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், திடீரென்று ஆய்வாளர்களை நோக்கி ஓடி வந்த அடையாளம் தெரியாத நபர், கட்டையால் தாக்க முயன்றார். இதனையடுத்து காவல் துறையினர் ஏற்கனவே விசாரித்துக்கொண்டிருந்த இரண்டு நபர்களும் இந்த சூழலை பயன்படுத்தி ஆய்வாளர்களை சரமாரியாக தாக்கினர்.

ரோந்து பணியிலிருந்த சார்பு ஆய்வாளர்களை பலமாக தாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள்

இதையடுத்து, பலத்த காயம் அடைந்த ஆய்வாளர்கள் மருத்துவச் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து எஸ்.பி. கூறுகையில், "தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகிறோம்" என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வாக்குப் பெட்டியுடன் ஓட முயன்ற அதிமுக வேட்பாளர் - சிசிடிவி காட்சி!

Intro:ராமநாதபுரம்

இராமநாதபுரம் உச்சிப்புளி அருகே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சார்பு ஆய்வாளர் படுகாயமடைந்த மருத்துவமனையில் அனுமதி, எஸ் பி.நேரில் ஆறுதல்.Body:இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பேக்கரி ஒன்றில் இரவு ரோந்து பணியில் சார்பு ஆய்வாளர்கள் நந்தகுமார் மற்றும் ஜெயபாண்டியன் இருந்துள்ளனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் காரின் பின்புறம் வழியாக சாலையின் எதிர்புறம் சென்று அங்கிருந்த பெரிய கட்டையை எடுத்துக்கொண்டு வேகமாக இரண்டு சார்பு ஆய்வாளர்களை நோக்கிச் சென்று சரமாரியாக தாக்க தொடங்கினான, சார்பு ஆய்வாளர்கள் தற்காப்பிற்காக பின்னோக்கி நகர போலீஸ் விசாரித்துக் கொண்டிருந்த 2 மர்ம நபர்கள் கற்கள், பேக்கரியில் இருந்த சேர் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் எஸ் ஐ ஜெயபாண்டியன் படுகாயம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வரும் எஸ் ஐயை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து எஸ்.பி கூறும்போது
இதுதொடர்பாக ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருவதாக தெரிவித்தார்.
இரவு பணியில் இருந்த சார்பு ஆய்வாளரை மர்ம நபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.