காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வருடா வருடம் ‘பேரறிஞர் அண்ணா’ பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தாண்டில், 100 காவலர்களுக்கு அண்ணா பதக்கத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில், இரண்டு பேர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவல்துறை அலுவலர்களாவர்.
![கடலோர காவல் பாதுகாப்புக் குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. இளங்கோ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4449903_ga-2.jpg)
![தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஏ. லிங்க பாண்டியன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4449903_ga-1.jpg)
அதில், ஒருவர் ராமநாதபுரம் கடலோர காவல் பாதுகாப்புக் குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. இளங்கோ. மற்றொருவர் ராமநாதபுரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஏ. லிங்க பாண்டியன்.