ETV Bharat / state

மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மீனவர்கள்!

author img

By

Published : Nov 11, 2019, 6:23 PM IST

மதுரை: மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் அரசிடம் உரிய விளக்கம் பெறுவதற்கு அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

madurai

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராயப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சின்னப்பள்ளம், மொட்டையன் பண்ணை, அன்னை நகர், தரவை தோப்பு உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர். அப்பகுதியில் அரசு டாஸ்மாக் கடையை திறக்க மீனவ கிராமங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், எதிர்ப்பை மீறி அப்பகுதியில் 3 அரசு டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துள்ளது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கென்று வகுத்துள்ள விதியை மீறி இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கூடம், வழிபாடு தலங்கள் அருகே விதிமீறி திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே விதிமீறி திறக்கப்பட்டுள்ள கடைகளை மூட அலுவலர்களுக்கு உத்தரவிடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மீத்தேன் திட்ட தடை வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராயப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சின்னப்பள்ளம், மொட்டையன் பண்ணை, அன்னை நகர், தரவை தோப்பு உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர். அப்பகுதியில் அரசு டாஸ்மாக் கடையை திறக்க மீனவ கிராமங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், எதிர்ப்பை மீறி அப்பகுதியில் 3 அரசு டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துள்ளது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கென்று வகுத்துள்ள விதியை மீறி இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கூடம், வழிபாடு தலங்கள் அருகே விதிமீறி திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே விதிமீறி திறக்கப்பட்டுள்ள கடைகளை மூட அலுவலர்களுக்கு உத்தரவிடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மீத்தேன் திட்ட தடை வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

Intro:ராமேஸ்வரத்திற்கு உட்பட்ட சின்னப்பள்ளம், மொட்டையன் பண்ணை, அன்னை நகர், தரவை தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை கோரி வழக்கு.

அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு.Body:ராமேஸ்வரத்திற்கு உட்பட்ட சின்னப்பள்ளம், மொட்டையன் பண்ணை, அன்னை நகர், தரவை தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை கோரி வழக்கு.

அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த அந்தோணி ராயப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்,


அதில், "ராமேஸ்வரதிற்க்கு உட்பட்ட சின்ன பல்லம், மொட்டையன் பண்ணை,அன்னை நகர் மற்றும் தரவை தோப்பு ஆகிய பகுதிகளில் அரசு மதுபான கடையை திரக்க அரசு திட்டமிட்டுள்ளது.இந்த பகுதிகள் அனைத்தும் மீனவ கிராமங்கள்,மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு உள்ளோம்.மேலும் மது அருந்த மாட்டோம் என அப்பகுதி மீனவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். இதேபோல் அப்பகுதியில் அரசு டாஸ்மாக் கடையை திறக்க மீனவ கிராமங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி 3 அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கென்று வகுத்துள்ள விதியை மீறி இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த டாஸ்மாக் கடைகள் பள்ளிக்கூடம்,வழிபாடு தங்களுக்கு அருகே நிறப்பட்டுள்ளது. இது போன்ற விதி மீறி திறப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோரி உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே டாஸ்மாக் கடைகளுக்குக்கென வகுத்துள்ள விதியை பின்பன்றி டாஸ்மாக் கடைகளை திறந்து,விதி மீறியுள்ள கடைகளை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது,அப்போது

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வு, இது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.