ETV Bharat / state

ராமநாதசுவாமி கோயிலில் 3ஆம் நாளாக மகாசிவராத்திரி திருவிழா - Ramanathaswamy Temple Festival

ராமநாதபுரம்: மாசி மகாசிவராத்திரி திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று, ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளினர்.

ramanathapuram
ராமநாதபுரம்
author img

By

Published : Mar 6, 2021, 9:44 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவும் ஒன்றாகும். இந்தாண்டிற்கான சிவராத்திரி திருவிழா மார்ச் 4ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று(மார்ச்.6) அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு 4 மணிவரையிலும் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து காலை 6 மணியளவில் ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளினர். இதனையொட்டி, காலை 6 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு சாமி தரிசனம் செய்வதற்கோ, 22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.

திருவிழாவின் நான்காம் நாளான நாளை(மார்ச்.6) காலை 9 மணியளவில் தங்கக் கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 8 மணியளவில் ஒளிவழிபாடு முடிந்து சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்கச் சிம்ம வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கோரி 46 பேரிடம் மோசடி

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவும் ஒன்றாகும். இந்தாண்டிற்கான சிவராத்திரி திருவிழா மார்ச் 4ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று(மார்ச்.6) அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு 4 மணிவரையிலும் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து காலை 6 மணியளவில் ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளினர். இதனையொட்டி, காலை 6 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு சாமி தரிசனம் செய்வதற்கோ, 22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.

திருவிழாவின் நான்காம் நாளான நாளை(மார்ச்.6) காலை 9 மணியளவில் தங்கக் கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 8 மணியளவில் ஒளிவழிபாடு முடிந்து சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்கச் சிம்ம வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கோரி 46 பேரிடம் மோசடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.