ETV Bharat / state

சட்டப்பேரவைத் தேர்தல்: கண்காணிப்பு பணியில் நுண் பார்வையாளர்கள்! - TN Election Assembly 2021

ராமநாதபுரத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் 96 தேர்தல் நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் நுண் பார்வையாளர்கள்
தேர்தல் நுண் பார்வையாளர்கள்
author img

By

Published : Apr 1, 2021, 10:52 PM IST

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஏப். 01) மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

இதில் இராமநாதபுரம், முதுகுளத்தூர் பகுதிக்கு சொராப் பாபு, பரமக்குடிக்கு விசோப் கென்யே, திருவாடானைக்கு அனுரக் வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது, ‘தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 80 இடங்களில் அமைந்துள்ள 228 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் சுதந்நிதராக வாக்களித்திட ஏதுவாக தேர்தல் நுண் பார்வையாளர்கள், கண்காணிப்பு, வெப் கேமரா கண்காணிப்பு, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. குறிப்பாக, பொதுத்துறை வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 96 நபர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளில் நுண் பார்வையாளர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும். வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் காலை 5:30 மணிக்கே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி உறுதி செய்திட வேண்டும்.

தேர்தல் வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நேர்மையாகவும், எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்திடும் வகையில் நுண்பார்வையாளர்களின் பணி அமைந்திட வேண்டும்.

தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து உரிய கால இடைவெளியில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். வாக்குச்சாவடி மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால், சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஏனுங்க மறக்காம ஓட்டு போடுங்க' - ஒரு விழிப்புணர்வு குரல்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஏப். 01) மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

இதில் இராமநாதபுரம், முதுகுளத்தூர் பகுதிக்கு சொராப் பாபு, பரமக்குடிக்கு விசோப் கென்யே, திருவாடானைக்கு அனுரக் வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது, ‘தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 80 இடங்களில் அமைந்துள்ள 228 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் சுதந்நிதராக வாக்களித்திட ஏதுவாக தேர்தல் நுண் பார்வையாளர்கள், கண்காணிப்பு, வெப் கேமரா கண்காணிப்பு, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. குறிப்பாக, பொதுத்துறை வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 96 நபர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளில் நுண் பார்வையாளர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும். வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் காலை 5:30 மணிக்கே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி உறுதி செய்திட வேண்டும்.

தேர்தல் வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நேர்மையாகவும், எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்திடும் வகையில் நுண்பார்வையாளர்களின் பணி அமைந்திட வேண்டும்.

தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து உரிய கால இடைவெளியில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். வாக்குச்சாவடி மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால், சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஏனுங்க மறக்காம ஓட்டு போடுங்க' - ஒரு விழிப்புணர்வு குரல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.