ETV Bharat / state

ராமநாதபுரத்தில் கொரோனோ? - நாடு திரும்பிய இளைஞர் மருத்துவமனையில் அனுமதி - தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் பாதிப்பு

ராமநாதபுரம்: சீனாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராமநாதபுரத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பா?
ராமநாதபுரத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பா?
author img

By

Published : Feb 2, 2020, 9:13 AM IST

சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவிவரும் சூழலில் அங்குள்ள இந்தியர்கள் பலர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் அங்கு வேலை பார்த்துவந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

இதில் 17 பேர் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மூன்று பேரும் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்குப் பின் ராமநாதபுரம் வந்துள்ளனர். இந்நிலையில் அந்த 20 நபரில் ஒருவருக்குத் தொடர் காய்ச்சல், இருமல் இருந்ததால் அவர் பாண்டுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்பு ராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காகச் சென்றவரிடம் எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டது. பின்பு அவருக்கு கொரோனோ வைரஸ் உள்ளதாகத் தவறான தகவல் வெளியாகியது.

ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை

இதனால் பதற்றமடைந்த அந்த இளைஞர் உணவருந்தி வருவதாகக் கூறி சென்று மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பவில்லை. இது குறித்து கூறிய ராமநாதபுரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் குமரகுருபரன் அந்த இளைஞருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்தார்.

மேலும் சீனாவிலிருந்து வந்துள்ள 20 பேரின் இல்லங்களிலும் சுகாதாரத் துறை ஊழியர்களே நேரில் சென்று அவர்களில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் இருக்கிறதா எனக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.


இதையும் படிங்க:

2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவிவரும் சூழலில் அங்குள்ள இந்தியர்கள் பலர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் அங்கு வேலை பார்த்துவந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

இதில் 17 பேர் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மூன்று பேரும் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்குப் பின் ராமநாதபுரம் வந்துள்ளனர். இந்நிலையில் அந்த 20 நபரில் ஒருவருக்குத் தொடர் காய்ச்சல், இருமல் இருந்ததால் அவர் பாண்டுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்பு ராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காகச் சென்றவரிடம் எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டது. பின்பு அவருக்கு கொரோனோ வைரஸ் உள்ளதாகத் தவறான தகவல் வெளியாகியது.

ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை

இதனால் பதற்றமடைந்த அந்த இளைஞர் உணவருந்தி வருவதாகக் கூறி சென்று மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பவில்லை. இது குறித்து கூறிய ராமநாதபுரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் குமரகுருபரன் அந்த இளைஞருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்தார்.

மேலும் சீனாவிலிருந்து வந்துள்ள 20 பேரின் இல்லங்களிலும் சுகாதாரத் துறை ஊழியர்களே நேரில் சென்று அவர்களில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் இருக்கிறதா எனக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.


இதையும் படிங்க:

2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

Intro:இராமநாதபுரத்தில் கரோனோ வைரஸ் பாதிப்பா?


Body:சீனாவில் கரோனோ வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பி அழைக்கப்பட்டு வருகின்றனர். அங்கு வேலை பார்த்து வந்த இராமநாதபுரத்தை சேர்ந்த 20 பேர் ஊருக்கு திரும்பினர். இதில் 17 பேர் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடியைச் சேந்த மூன்று பேர். இவர்கள் விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்கு பின் இராமநாதபுரம் வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த 20 நபரில் ஒருவருக்கு தொடர் காய்ச்சல், இரும்பல் இருந்ததால் அவர் பாண்டுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனை பரிந்துரை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு இரத்ததில் வெள்ளை அணுக்கள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கரோனோ வைரஸ் என தவறான தகவல் வெளியாகியது.

இதனால் பதற்றமடைந்த அந்த இளைஞர் உணவருந்தி வருவதாகக் கூறி சென்று திரும்பவில்லை. இது குறித்து கூறிய இராமநாதபுரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் குமரகுருபரன் அந்த இளைஞருக்கு கரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்தார். மேலும் சீனாவின் இருந்து வந்துள்ள 20 பேரின் இல்லங்களில் நேரில் செல்லும் சுகாதாரத் துறை ஊழியர்கள் அவர்களில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் இருக்கிறதா என கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.