உலகப் பெருங்கடல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வன உயிரின சரகம் கட்டுப்பாட்டிலுள்ள குருசடை தீவு, முயல் தீவு பகுதி கடற்கரைகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூய்மைப் பணியில் வன அலுவலர்கள்
இதில் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், வனவர் தேவகுமார், மகேந்திரன், வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் கடற்கரை தீவுப் பகுதிகளில் இருந்த நெகிழி, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை சேகரித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.