ETV Bharat / state

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக நிர்வாகிகள் இடையே மோதல்

author img

By

Published : Mar 17, 2021, 6:21 PM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கலின்போது, திமுக நிர்வாகிகள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக நிர்வாகிகள் இடையே மோதல்
திமுக நிர்வாகிகள் இடையே மோதல்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜகண்ணப்பன் இன்று (மார்ச் 17) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது திமுக நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது.

திமுக நிர்வாகிகள் இடையே மோதல்

இம்மோதலில் திமுகவில் உள்ள இரு தரப்பினரும் அரிவாள், கட்டை ஆகியவற்றால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் முத்துக்குமார், பாலமுருகன் ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், முதுகுளத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜகண்ணப்பன் இன்று (மார்ச் 17) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது திமுக நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது.

திமுக நிர்வாகிகள் இடையே மோதல்

இம்மோதலில் திமுகவில் உள்ள இரு தரப்பினரும் அரிவாள், கட்டை ஆகியவற்றால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் முத்துக்குமார், பாலமுருகன் ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், முதுகுளத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.