ராமநாதபுரம்: நாகநாதபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் சீனிநாகூர்கனி. இவரது மகள் ஜமீல்ரியாத். இவர் பாஸ்போர்ட் பெற மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழின் மீது சந்தேகம் அடைந்த அலுவலர்கள் அதன் உண்மை தன்மையை அறிய சம்பந்தப்பட்ட துறையினரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் அந்த பிறப்பு சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலி பிறப்பு சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் பெற முயன்றதாக மதுரை பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அந்த பெண் மீது கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகளைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்