ETV Bharat / state

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை

author img

By

Published : Jan 6, 2020, 10:19 PM IST

ராமநாதபுரம்: குறைதீர் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்வில்லை என்றால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

grievances day
grievances day

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு துறையிலான அலுவலர்களின் வருகை குறித்து கணக்கெடுப்பு நடத்தினார். அப்பொழுது பல துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அடுத்துவரும் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்றும், குறைதீர் கூட்டத்திற்கு அலுவலர்கள் முறையாகப் பங்கேற்கவில்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் கண்டிப்பு

முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு செய்தபோது, மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் தேங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தத் துறையை சேர்ந்த அலுவலர்கள் முறையாகப் பரிசீலனை செய்து, அதனைத் தீர்க்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ‘மாற்றம் வராது, மண்ணாங்கட்டிதான் வரும்’ - இயக்குநர் சேரன்

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு துறையிலான அலுவலர்களின் வருகை குறித்து கணக்கெடுப்பு நடத்தினார். அப்பொழுது பல துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அடுத்துவரும் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்றும், குறைதீர் கூட்டத்திற்கு அலுவலர்கள் முறையாகப் பங்கேற்கவில்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் கண்டிப்பு

முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு செய்தபோது, மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் தேங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தத் துறையை சேர்ந்த அலுவலர்கள் முறையாகப் பரிசீலனை செய்து, அதனைத் தீர்க்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ‘மாற்றம் வராது, மண்ணாங்கட்டிதான் வரும்’ - இயக்குநர் சேரன்

Intro:மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்காத அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


Body:இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வாரம் திங்கள் முதல் நாள் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருவது வழக்கம். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்ததால் நடத்தப்படவில்லை. முதல் ஒரு மாத காலத்திற் பிறகு மக்கள் குறைதீர் கூட்டம் இன்று கூட்ட அரங்கில் கூடியது. குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு துறையிலான அதிகாரிகளை கணக்கெடுப்பு செய்தார். அப்பொழுது பல துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அதில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்சியர் வீரராகவராவ் அங்கு வந்திருந்த அதிகாரிகளிடம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் முறையாக பங்கேற்க வேண்டும். பங்கேற்காமல் தவிர்க்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள் பரிசீலிக்கப் படாமல் தேங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அதை அந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் முறையாக பரிசீலனை செய்து தீர்க்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.