ETV Bharat / state

முதல்நாள் முடிவில் 700 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன்! - கடன் வழங்கும் முகாம்

ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் பங்கேற்ற 700 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

கடன்
author img

By

Published : Oct 3, 2019, 11:10 PM IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான வங்கிகள் கலந்துகொண்டன. இதன் முதல்நாள் முடிவில் 700 பயனாளிகளுக்கு ரூ. 300 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக விழாவில் பேசிய ஆட்சியர் "பிரதமர் உத்தரவின்படி இந்திய அளவில் சிறப்புக் கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக 117 தேர்ந்தெடுக்கப்பட்டது, இதில் இராமநாதபுரமும் ஒன்றாகும். இதன் அடிப்படையில் கல்வி வளர்ச்சி, வேளாண்மை, நீர்ப்பாசனம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை வங்கிகள் சார்பாக ஏறத்தாழ 25 வங்கிகள் பங்கேற்ற மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாம்

மத்திய, மாநில அரசுகள் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல சிறு குறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் முத்ரா கடன் உதவி திட்டங்களும் உள்ளன. நடப்பாண்டில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 350 கோடி கடன் உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 2 லட்சம் பனை மரங்கள் உள்ளன. பனை தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை ரூ. 50 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்".

இந்த விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் கேதார்நாத், தூத்துக்குடி முதன்மை மண்டல மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முறையாக பந்தல் அமைக்காததாலும் மக்கள் அதிக அளவில் திரண்டதாலும் மக்கள் கூட்ட நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையும் படிக்கலாமே: ஏரோநாட்டிக்கல் படிப்புக்கு கல்விக் கடன் கிடையாது... ஆதிதிராவிட நலத்துறை செயலருக்கு நோட்டீஸ்!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான வங்கிகள் கலந்துகொண்டன. இதன் முதல்நாள் முடிவில் 700 பயனாளிகளுக்கு ரூ. 300 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக விழாவில் பேசிய ஆட்சியர் "பிரதமர் உத்தரவின்படி இந்திய அளவில் சிறப்புக் கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக 117 தேர்ந்தெடுக்கப்பட்டது, இதில் இராமநாதபுரமும் ஒன்றாகும். இதன் அடிப்படையில் கல்வி வளர்ச்சி, வேளாண்மை, நீர்ப்பாசனம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை வங்கிகள் சார்பாக ஏறத்தாழ 25 வங்கிகள் பங்கேற்ற மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாம்

மத்திய, மாநில அரசுகள் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல சிறு குறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் முத்ரா கடன் உதவி திட்டங்களும் உள்ளன. நடப்பாண்டில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 350 கோடி கடன் உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 2 லட்சம் பனை மரங்கள் உள்ளன. பனை தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை ரூ. 50 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்".

இந்த விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் கேதார்நாத், தூத்துக்குடி முதன்மை மண்டல மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முறையாக பந்தல் அமைக்காததாலும் மக்கள் அதிக அளவில் திரண்டதாலும் மக்கள் கூட்ட நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையும் படிக்கலாமே: ஏரோநாட்டிக்கல் படிப்புக்கு கல்விக் கடன் கிடையாது... ஆதிதிராவிட நலத்துறை செயலருக்கு நோட்டீஸ்!

Intro:இராமநாதபுரம்
அக்.3
பொதுத்துறை, தனியார், கூட்டுறவு வங்கிகள் இணைந்து நடத்தும் சேவை கரம் நீட்டும் இரண்டு நாள் முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய ஆட்சியர்.


Body:இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் வளாகத்தில், பொதுத்துறை, தனியார், கூட்டுறவு வங்கிகள் சார்பாக இரண்டு நாள் சேவை கரம் நீட்டும் முகாம் இன்று துவங்கியது. இதை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் துவங்கி வைத்து, அனைத்து வங்கிகளின் அரங்குகளையும் பார்வையிட்டு பின் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 700 பயனாளிகளுக்கு ரூபாய் 300 கோடி கடனுதவிக்கான காசோலையை வழங்கினார்.

முன்னதாக விழாவில் பேசிய ஆட்சியர் கூறியது " பிரதமர் உத்தரவின்படி இந்திய அளவில் சிறப்புக் கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக 117 தேர்ந்தெடுக்கப்பட்டது இதில் இராமநாதபுரம் ஒன்றாகும்.
இதன் அடிப்படையில் கல்வி வளர்ச்சி, வேளாண்மை, நீர்ப்பாசனம், வேலைவாய்ப்பு, உள்ளிட்ட காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுத்துறை தனியார் மற்றும் கூட்டுறவுதுறை வங்கிகள் சார்பாக ஏறத்தாழ 25 வங்கிகள் பங்கேற்ற மாபெரும் கரம் நீட்டும் முகாம் நடத்தப்பட்ட பொது மக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதில் வீட்டுக் கடன், வாகனக் கடன், விவசாயக் கடன், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல சிறு குறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் முத்ரா கடன் உதவி திட்டங்களும் உள்ளன, நடப்பாண்டில் முத்ரா திட்டம் கீழ் 350 கோடி ரூபாய் கடன் உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கிட 350 கோடி திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் 2 லட்சம் பனை மரங்கள் உள்ளன. பனை தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை 50 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்". இந்த விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் கேதார்நாத், தூத்துக்குடி முதன்மை மண்டல மேலாளர் விஸ்வநாதன் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முறையாக பந்தல் அமைக்காததாலும் மக்கள் அதிக அளவில் திரண்டதாலும் மக்கள் கூட்ட நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.